மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி! கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் சோகம்
மதுரை: மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவரை மாடு முட்டியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் மகேஷ் பாண்டி கலந்து கொண்டார். அப்போது அரங்க வாயிலில் அவிழ்த்துவிடப்பட்ட மாடுகளை வீரர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர்.
அவைகளை மகேஷ் பாண்டியும் பிடிக்க முயன்றார். அப்போது ஒரு மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு எழுந்தது.












Click it and Unblock the Notifications