மதுரை மேலூர் அருகே சரக்கு லாரி- கார் மோதல்! மதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் பலியான சோகம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மேலூரில் நடந்த சாலை விபத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சரக்கு லாரி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், அந்த சரக்கு லாரி மீது மோதியது.

இதில் மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு பச்சமுத்து காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது.












Click it and Unblock the Notifications