நாங்கள் தருவதை மட்டும் செய்தி போடுங்கள்! மதுரை வாக்குஎண்ணும் மையத்தில் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு
மதுரை: மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையை செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் நடந்த தேர்தலில் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையான இன்று மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையை செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் செய்தி சேகரிக்க உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே ஊடகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மாவட்ட/மாநகராட்சி நிர்வாகம் தருவது மட்டுமே செய்தி, அதை வெளியிட்டால் போதும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications