மதுரை வந்த மோடியிடம், தமிழக பிரச்சினைகள் பற்றி மனு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில், ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் மோடி அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடக்கிய மனு ஒன்றினை பிரதமர் மோடியிடம் கொடுத்தார்.

- ஜெயலலிதா, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
- சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும்
- கர்நாடக அரசு அளித்த மேகதாது திட்ட விரிவான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்
- முல்லை பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
- ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரம் நகரங்களில் உதான் திட்டம் கீழ் விமானம் சேவை தேவை
- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில் 50:50 கூட்டுத் திட்டத்தில் அனுமதி அளிக்க வேண்டும்.
இதுபோன்றவை முக்கிய கோரிக்கைகளாகும்.












Click it and Unblock the Notifications