மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொட்டுக் கூட பார்க்க முடியாத கோட்டை அதிமுக.. ஆர்பி உதயக்குமார் ஆவி பறக்கும் பிரச்சாரம்!

திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

மதுரை: அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று சொல்கிறார் தினகரன். இவர்தான் உண்மையான துரோகி. யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாத கோட்டை அதிமுக என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக, ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரச்சாரத்திற்குக் கூட்டம் வருகிறதோ இல்லையோ, தலைவர்களின் பேச்செல்லாம் நல்லாருக்கு. முனியாண்டி முகத்தில் பால் வடிகிறது என்று சொல்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதையும் அதிமுகவினர் ரசிக்கின்றனர்.

வேற இடமே இல்லையா.. சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாதான் அமித் ஷா பேரணி போகணுமா.. பாட்னாவில் பரபரப்பு வேற இடமே இல்லையா.. சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாதான் அமித் ஷா பேரணி போகணுமா.. பாட்னாவில் பரபரப்பு

நாகமலை

நாகமலை

இந்த நிலையில் வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தீவிரப் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். மதுரை நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.

ஆட்சி கவிழ்ப்போம்

ஆட்சி கவிழ்ப்போம்

உதயக்குமார் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ஒரே மாதிரி பேசி வருகிறார்கள். அதாவது அதிமுக ஆட்சி மே 23ம் தேதிக்குப் பிறகு இருக்காது. கவிழ்ந்து விடும். கவிழ்ப்போம் என்று பேசி வருகிறார்கள்.

பச்சை துரோகம்

பச்சை துரோகம்

இது அம்மாவின் அரசு. அம்மாவால் ஏற்படுத்தப்பட்ட அரசு. இதை திமுகவுடன் சேர்ந்து கவிழ்ப்போம் என்று சொல்கிறார் தினகரன். இதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும். இதுதான் பச்சை துரோகம். இவர் எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொல்கிறார்.

நடவடிக்கை

நடவடிக்கை

அதிமுக மட்டுமல்ல, அம்மா உருவாக்கிய ஆட்சியையும் கூட இவர்களால் தொட்டுப் பார்க்க முடியாது. கோட்டை இது இது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் உதயக்குமார்.

 இரு முனை தாக்குதல்

இரு முனை தாக்குதல்

அதிமுகவுக்கு சற்றே ஆறுதலான தொகுதிகளாக பார்க்கப்படுவது சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம்தான். ஆனால் திருப்பரங்குன்றத்தில் திமுக ஒரு பக்கமும், அமமுக மறுபக்கமும் என இரு முனைத் தாக்குதலை கொடுத்து வருவதால் அதிமுக தலைவர்கள் திருப்பரங்குன்றத்திற்கு தனி கவனம் கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனராம்.

English summary
Minister RB Udhyakumar has criticized TTV Dinakaran and MK Stalin in Thiruparankundram Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X