"அண்ணே பாடை கட்டி தயாரா இருக்கேன் வாங்க!.." ஆர்.பி. உதயகுமாரை மிரட்டியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
மதுரை: ஆர்.பி. உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவில் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவது யார் என ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. பொதுக் குழு தொடர்பாக இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவின் தீ்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் வார்த்தை போர்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இரு தரப்பினரும் மாறி மாறி கட்சிக்கு துரோகி, விசுவாசமற்றவர் என்றெல்லாம் விமர்சித்துக் கொள்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக��மார் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவருக்கு பேச்சுக்கு ஓபிஎஸ் தரப்பு பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

எதிர்க்கட்சித் துணை தலைவர்
ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை உதயகுமாருக்கு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் உதயகுமார் எடப்பாடியின் அதி தீவிர விசுவாசியானார். ஒரு க���்டத்தில் ஓபிஎஸ் தலைமை பதவி ஏற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர்.பி. உதயகுமார் பேசியிருந்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரை தொடர்பு கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் வரம்பு மீறி பேசியதாக தெரிகிறது. செல்போனில் உதயகுமாரை தொடர்பு கொண்ட அந்த நபர், புலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு எப்போது வருவீர்கள்.

தற��கொலை செய்வதாக கூறிய மாஜி
ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது என அந்த நபர் கூறியிருந்தார். இது தொடர்பாக புகாரின் பேரில் தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
இவர் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் என தெரிகிறது. இந்த உரையாடல் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்களும் ரவுடிகளும் இருப்பதாக ஓபிஎஸ் சொல்லிய நிலையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் பேசியுள்ளதை இபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications