"அண்ணே பாடை கட்டி தயாரா இருக்கேன் வாங்க!.." ஆர்.பி. உதயகுமாரை மிரட்டியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
மதுரை: ஆர்.பி. உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவில் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவது யார் என ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. பொதுக் குழு தொடர்பாக இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவின் தீ்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் வார்த்தை போர்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இரு தரப்பினரும் மாறி மாறி கட்சிக்கு துரோகி, விசுவாசமற்றவர் என்றெல்லாம் விமர்சித்துக் கொள்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக��மார் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவருக்கு பேச்சுக்கு ஓபிஎஸ் தரப்பு பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

எதிர்க்கட்சித் துணை தலைவர்
ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை உதயகுமாருக்கு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் உதயகுமார் எடப்பாடியின் அதி தீவிர விசுவாசியானார். ஒரு க���்டத்தில் ஓபிஎஸ் தலைமை பதவி ஏற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர்.பி. உதயகுமார் பேசியிருந்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரை தொடர்பு கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் வரம்பு மீறி பேசியதாக தெரிகிறது. செல்போனில் உதயகுமாரை தொடர்பு கொண்ட அந்த நபர், புலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு எப்போது வருவீர்கள்.

தற��கொலை செய்வதாக கூறிய மாஜி
ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது என அந்த நபர் கூறியிருந்தார். இது தொடர்பாக புகாரின் பேரில் தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
இவர் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் என தெரிகிறது. இந்த உரையாடல் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்களும் ரவுடிகளும் இருப்பதாக ஓபிஎஸ் சொல்லிய நிலையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் பேசியுள்ளதை இபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications