பாஸ்டர் செய்த பகீர் காரியம்.. அதிர்ந்த மக்கள்.. அள்ளி கொண்டு போன போலீசார்.. மதுரையில்!
மதுரையில் பைக் திருடிய மதபோதகர் கைது செய்யப்பட்டார்
மதுரை: பாஸ்டர் செய்த வேலையை பார்த்து அள்ளி கொண்டு போய்விட்டனர் மதுரை போரீசார்.. துருவி துருவி நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே உள்ளது பர்மா காலனி.. இங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருபவர் சாமுவேல்.. இவருக்கு விஜயன் என்று மற்றொரு பெயரும் உண்டு,
''கிறிஸ்தவ புல்டர்ஸ் அசெம்ப்ளி சபை'' என்ற ஒரு சபையை நடத்தி வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு, மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஒரு பைக்கை எடுத்து கொண்டு வந்தார்.. அந்த பைக்கை உடனே விற்க வேண்டும் என்றும் சொன்னார்.

கடையில் உள்ளவர்களும் பைக் பற்றின விவரத்தை கேட்டனர்.. அதற்கு சாமுவேல் திருதிருவென விழித்துள்ளார்.. இதை பார்த்ததும் மெக்கானிக்குக்கு சந்தேகம் வந்துவிட்டது.. உடனே சுப்பிரமணியபுரம் போலீஸாரிடம் தெரிவித்தார்.
போலீசாரும் விரைந்து வந்து சாமுவேலை பிடித்து விசாரித்தனர்.. அப்போது போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது, "கம்பத்தை சேர்ந்தவர்தான் சாமுவேல்.. 2 வருஷத்துக்கு முன்பு தனக்கன்குளத்துக்கு வந்திருக்கிறார். 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, அங்கு மத பிரச்சாரம் செய்து வந்துள்ளார். ஆனால், சாமுவேல் அங்கீகரிக்கப்பட்ட திருச்சபையை சேர்ந்தவர் கிடையாது.
தற்போது லாக்டவுன் உள்ளதால், கையில் காசு இல்லை.. வாடகை தர முடியவில்லை.. அதனால்தான் பைக்கை திருட முடிவு செய்தார்.. திருமங்கலம், எஸ்எஸ் காலனி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிறைய பைக்குகளை அவர் திருடியிருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
அவைகளில் சில வண்டிகளை அடகு வைத்து பணமும் வாங்கி உள்ளார்" என்றனர்.. தற்போது சாமுவேல் மற்றும் அவருக்கு உதவிய திருநகரைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.. சாமுவேலிடம் இருந்து இதுவரை 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்!












Click it and Unblock the Notifications