அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்.. ஏமாந்துவிடாதீர்கள்... கமல்ஹாசன் பொளேர்
மதுரை: அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்கள் ஏமாந்துவிடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றார்.
மேலும், எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றாவிடில் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் வாக்குறுதி அளித்தார். தலைவர்களை தேடாதீர்கள்; நீங்கள் தான் தலைவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
பல கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் வாங்குவது, நம் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல் ஆகிவிடும் என்றும் கூறினார். குழந்தை பருவத்தில் இருந்து தம்மை பராமரித்த தமிழகத்திற்கு கைமாறாக களத்தில் இறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications