பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல..வன்மம்.. தீராத வன்மம்.. சு வெங்கடேசன் பதிவால் பரபரப்பு
மதுரை: கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்திற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை மதுரை சிட்டிங் எம்பியும், திமுக கூட்டணி லோக்சபா வேட்பாளருமான சு வெங்கடேசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூர் நகரில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

இதையடுத்து கர்நாடகா அரசு மாநிலத்தில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுவதாகவும், பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், ரூ.18 ஆயிரம் கோடி ,நிவாரண நிதி வழங்க கோரி மத்திய அரசுக்கு எழுதியது. இதையடுத்து 10 அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கர்நாடகத்திற்கு வருகை தந்து வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி சென்றார்கள். மத்திய நிபுணர்கள் குழுவினர் கர்நாடகத்தில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி இருந்தார்கள்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை கர்நாடகத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனால் வறட்சி நிவாரண நிதியை கர்நாடகத்திற்கு வழங்கும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக 32-வது சட்ட விதிகளின்படி கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு (IMCT) அறிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் NDRF உதவியை வழங்குவது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
இதனிடையே மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக, மாநிலத்தைச் சேர்ந்த யாராவது மத்திய அரசிடம் பேசி இருந்தால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று கூறினார்.
இதனிடையே நிதி வழங்குவது தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக நிவாரணம் கோரி பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி வருவதாக நீதிமன்றம் கவலையை வெளிப்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. முன்னாக பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதேபோல் கேரள அரசும், மத்திய அரசு கடன் வாங்கும் வரம்பை குறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இப்படி அடுத்தடுத்து வழக்குகள் வந்த நிலையில், மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இதன்படி 18000 கோடி ரூபாய் கேட்ட, கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக 38000 கோடி ரூபாய் கேட்ட தமிழக அரசுக்கு 275 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி உள்ளது. அதாவது இருமாநிலங்களுக்கும் சேர்த்து 3730 கோடியே 32 லட்சம்ட ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடியாகும். பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல... வன்மம்.. தீராத வன்மம்." இவ்வாறு மத்திய அரசை வெங்கடேசன் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications