Sundar C: ஏசி சண்முகத்தின் ஆஸ்தான இயக்குநர்.. சுந்தர் சி வேட்பாளரானது எப்படி? பின்னணியில் குஷ்பு!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தீவிர அரசியலில் கூட ஈடுபடாத சுந்தர் சி திடீரென அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக நிறுத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் குஷ்பு இருப்பதாகவும் ஒரு தரப்பு சொல்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக கூட்டணி புதிய நீதிக் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிட உள்ளனர். அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மதுரையில் புதிய நீதிக் கட்சி சார்பாக வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடியில் சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர் சி, தானும் ஒரு பிள்ளை சமூகத்தை சார்ந்தவன் என்று பெருமையாக பேசினார்.
அப்போதே சுந்தர் சியின் பேச்சு சர்ச்சையாகியது. கடந்த சில நாட்களாகவே வெள்ளாளர் சமூகத்தை முன்னிறுத்தி புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். அதேபோல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக ஒரு ஸ்டார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாஜக எண்ணியது.
அதேபோல் சுந்தர் சி நீண்ட காலமாகவே ஏசி சண்முகம் தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். அரண்மனை 3, அரண்மனை 4, காஃபி வித் காதல், மத கஜ ராஜா, கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களை ஏசி சண்முகம் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், சுந்தர் சியின் படங்களை மட்டுமே ஏசி சண்முகம் தயாரித்திருக்கிறார்.
அதேபோல் பாஜக சார்பாக இம்முறை குஷ்புவுக்கு சிட் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏசி சண்முகத்தின் ஆஸ்தான இயக்குநரான சுந்தர் சியை வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர். இதுவரை குஷ்புவுக்காக கூட சுந்தர் சி பெரிதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதே இல்லை. அதேபோல் அரசியலும் பெரியளவில் பேசியதே இல்லை. திடீரென தீவிர அரசியலில் முக்கியமான அமைச்சரவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்து களமிறங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications