Sundar C: ஏசி சண்முகத்தின் ஆஸ்தான இயக்குநர்.. சுந்தர் சி வேட்பாளரானது எப்படி? பின்னணியில் குஷ்பு!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தீவிர அரசியலில் கூட ஈடுபடாத சுந்தர் சி திடீரென அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக நிறுத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் குஷ்பு இருப்பதாகவும் ஒரு தரப்பு சொல்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக கூட்டணி புதிய நீதிக் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிட உள்ளனர். அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மதுரையில் புதிய நீதிக் கட்சி சார்பாக வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடியில் சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர் சி, தானும் ஒரு பிள்ளை சமூகத்தை சார்ந்தவன் என்று பெருமையாக பேசினார்.
அப்போதே சுந்தர் சியின் பேச்சு சர்ச்சையாகியது. கடந்த சில நாட்களாகவே வெள்ளாளர் சமூகத்தை முன்னிறுத்தி புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். அதேபோல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக ஒரு ஸ்டார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாஜக எண்ணியது.
அதேபோல் சுந்தர் சி நீண்ட காலமாகவே ஏசி சண்முகம் தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். அரண்மனை 3, அரண்மனை 4, காஃபி வித் காதல், மத கஜ ராஜா, கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களை ஏசி சண்முகம் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், சுந்தர் சியின் படங்களை மட்டுமே ஏசி சண்முகம் தயாரித்திருக்கிறார்.
அதேபோல் பாஜக சார்பாக இம்முறை குஷ்புவுக்கு சிட் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏசி சண்முகத்தின் ஆஸ்தான இயக்குநரான சுந்தர் சியை வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர். இதுவரை குஷ்புவுக்காக கூட சுந்தர் சி பெரிதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதே இல்லை. அதேபோல் அரசியலும் பெரியளவில் பேசியதே இல்லை. திடீரென தீவிர அரசியலில் முக்கியமான அமைச்சரவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்து களமிறங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications