தமிழகம் அதிகம் முன்னேறிய மாநிலம்..உங்களுக்கு முன்னுரிமை அளிப்போம்.. மதுரையில் மோடி உரை!
தமிழகம் அதிகம் முன்னேறிய மாநிலம், இதனால் தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகம் அதிகம் முன்னேறிய மாநிலம், இதனால் தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின் அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்தது தமிழகம் என்று உரையை தொடங்கிய மோடி 20 நிமிடம் பேசினார். பாஜக தேசிய செயலாளர் அவரது உரையை மொழிபெயர்த்தார்.
மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள பெருமை பெற்றது மதுரை. மதுரையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் கண்ட மதுரை. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.
பெரிய தொலைநோக்கு
பெரிய தொலைநோக்கு வசதியுடன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க திட்டம் உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும். பாஜக ஆட்சியில் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 47 லட்சமும் கழிப்பறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டது.
சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது
பாஜக ஆட்சியில் 35 ஆயிரம் கிமீக்கு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, புதிய வான்வழி போக்குவரத்து.ராமேஷ்வரம் மற்றும் பாம்பனை தனுஷ்கோடியுடன் இணைக்க போகிறோம். நீண்ட கால கோரிக்கையான அதி விரைவு ரயில் சேவை தேஜஸ் இயக்கப்படும்.மதுரை-சென்னை நடுவே இந்த ரயில் இயக்கப்படும்.
முன்னேறிய மாநிலம்
தமிழகம் அதிக முன்னேறிய மாநிலம். இங்கு அதிக தொழிற்சாலைகள் அமைந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம். தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம்.
தூத்துக்குடி சாலை
தூத்துக்குடிக்கு புதிய சாலை அமைக்கும் திட்டத்தில் இருக்கிறோம். இதனால் தமிழகத்தில் தூத்துக்குடி வேகமாக முன்னேற்றம் அடையும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தூத்துக்குடி துறைமுகம் முக்கியமானது. தூத்துக்குடி துறைமுகம் தென் இந்தியாவிலேயே முக்கிய துறைமுகமாக முன்னேற்றப்படும். இதன் மூலம் தூத்துக்குடியில் தொழில் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்படும், என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.