உங்க சர்டிஃபிகேட்ஸை தர மாட்றாங்களா? சான்றிதழ்கள் மீது யாருக்கும் உரிமையில்லை..உயர் நீதிமன்றம் அதிரடி
மதுரை: ஒருவரின் கல்விச் சான்றிதழின் மீது வேறு யாரும் உரிமை கோர முடியாது எனவும், கல்விச்சான்றிதழ்கள் விற்பனை பொருட்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவர் ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் பல்நோக்கு மருத்துவ படிப்பினை பயின்ற நிலையில் தன்னை கட்டாய பணி ஒப்பந்தத்தில் இருந்து விடுவிப்பதோடு, தனது அசல் சான்றிதழ்களை வழங்க உத்தரவிடுமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் பல்நோக்கு மருத்துவ படிப்பினை 2024 பிப்ரவரி மாதத்தோடு நிறைவு செய்துள்ளார்.
சேவை சாரா படிப்பை பயின்றுள்ளார். படிப்பை நிறைவு செய்த பின் 2 ஆண்டுகள் கட்டாய ஒப்பந்த பணி செய்ய வேண்டும் என்ற விதி தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கோவிட் நோய் தொற்று காலத்தில் பணியாற்றியுள்ளார். அதனை கட்டாய ஒப்பந்த பணிக்காலமாக கருதி, சான்றிதழ்களை வழங்குமாறு கோருகிறார்.
ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சேவை சாரா படிப்பினை பயின்றாலும் அவர்களும் கோவிட் நோய் தொற்று காலத்தில் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி இருக்கிறார்கள். ஆகவே அதனை கட்டாய ஒப்பந்த பணி காலமாக கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. ஆகவே கோவிட் நோய் தொற்று காலத்தில் ஆற்றிய பணியும் ஒப்பந்த பணியாக கருத்தில் கொள்ளலாம்.
மேலும் ஒருவரின் கல்விச் சான்றிதழின் மீது யாரும் உரிமை கோர முடியாது. கல்விச்சான்றிதழ்கள் சந்தை விற்பனை பொருட்கள் அல்ல. ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரியின் முதல்வர் மனுதாரரின் சான்றிதழ்களை 4 வாரத்திற்குள்ளாக வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications