Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1920ல் என்ன நடந்தது தெரியுமா? முடிஞ்சா அது தீபத்தூண் என்று நிரூபியுங்கள்! தமிழக அரசு முக்கிய வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 1920-ல் நடந்த முதல் வழக்கில் இந்த 'தீபத்தூண்' குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மனுதாரர்கள் அப்போதெல்லாம் தீபத்தூண் என்று குறிப்பிடவே இல்லை. எனவே, அந்தத் தூணில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது என மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு மிக முக்கியமான் வாதங்களை வைத்து வருவதால் வழக்கு கவனம் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை இன்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்போது தமிழக அரசு சார்பில் கோவில் அருகே தர்கா உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.

தமிழக அரசு சொன்னது என்ன?

இந்த வழக்கில் தமிழக அரசு வைத்த வாதத்தில், மதுரை திருபரங்குன்ற கோயிலில் கார்த்திகை தீபம் பண்டிகையின்போது, விளக்கேற்றும் உரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. 500 அடி குன்றடிவாரத்தில் அமையப்பெற்றுள்ள இக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு தர்காவும் உள்ளது. பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ராம ரவிக்குமார், கோயில் நிர்வாகம் அல்லது தானே, தர்காவிற்கு அருகிலுள்ள 'தீபத்தூண்' என்ற இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Thirupparankundram Temple mountains pillar is not proved as Deepathoom says TN Govt in Court

இந்த விவாதத்தின் மையப்புள்ளி, 'தீபத்தூண்' எனப்படும் அமைப்பின் இருப்புதான். அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி, 1920-ல் நடந்த முதல் வழக்கில் இந்த 'தீபத்தூண்' குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மனுதாரர்கள் அப்போதெல்லாம் தீபத்தூண் என்று குறிப்பிடவே இல்லை. எனவே, அந்தத் தூணில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது என மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் நிரூபிக்கப்படவில்லை.

சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகு, 1994-ல் அடுத்த வழக்கு தொடரப்பட்டது. இந்த நீண்ட இடைப்பட்ட காலத்தில், திருபரங்குன்றத்தில் மக்கள் தொடர்ந்து விளக்கேற்றினர். தீபத்தூண் என்று இவர்கள் சொல்லும் இடத்தில் ஏற்றப்படவில்லை. இரு சமூகத்தாரும் எவ்வித இடையூறின்றி, அமைதியான சகவாழ்வுடன் வழிபட்டனர். 1994-ல், இதே போன்ற கோரிக்கையுடன் பொதுநல வழக்கு தனி நீதிபதி முன் வந்தது.

பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது, அந்த நிலையை மாற்ற நியாயமான காரணம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இடம் மாற்றம் குறித்த முடிவை கோயில் நிர்வாகமே எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

பின்னர், 2014-ல் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தீபம் ஏற்றுவதை வேறு இடத்திற்கு மாற்ற அவசியமில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதிலும், 2017-ல் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.


தீபத்தூண் இல்லை

முன்னதாக திருப்பரங்குன்றம் மலையில் இரண்டு சர்வே கல் அமைக்கப்பட்டதாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில் அளித்துள்ளது. தற்போது அங்கே தூண் அல்லது சர்வே கல் வடிவத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. இதை இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் தீபத்தூண் என்று கூறுகின்றனர். அதே சமயம் ஆளும் திமுக தரப்பினர், அதாவது கனிமொழி எம்பி உள்ளிட்டோர் இதை சர்வே கல் என்று கூறி உள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் காட்டி உள்ளனர்.

இந்த நிலையில்தான் அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. 1808-09, 1871-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அந்த கற்கள் வெறும் சர்வே கற்கள் என்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது. மதுரையை சேர்ந்த அப்துல் ஜாபர் என்ற நபர் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அனுப்பப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூண்

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் தொடர்பாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். துணை இயக்குநர் யதீஷ் குமார் மற்றும் உதவி இயக்குநர் லோகநாதன் ஆகியோர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு இந்த பணிகளை மேற்கொண்டது.

எதிர்தரப்பினர் இந்த அமைப்பை நில அளவைக் கல் என வாதிட்டாலும், அதன் உண்மையான இயல்பு, வரலாற்றை இந்த ஆய்வு மூலம் கண்டறிய முடியும் எனத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான பகுப்பாய்வு மூலம் அதன் தன்மை உறுதி செய்யப்படும்.

ஆனால், மனுதாரர் தரப்பு ராம ரவிக்குமார் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ். குமார், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, புதிய ஆதாரங்களை உருவாக்க அரசு அப்பகுதிக்குள் நுழைவது சட்டப்படி தவறு என குறிப்பிட்டார். அவர் மேலும், "தூணின் அமைப்பு குறித்த இந்த 'புதிய' ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், வழக்கின் தன்மையே மாறக்கூடும்" என்று எச்சரித்தார்.

திருபரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியிலான பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+