குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
மதுரை: திருப்பரங்குன்றத்தில் இன்று முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற்று பரவசம் அடைந்தார்கள்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் ஜருராக தொடங்கியது..

அசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன்னுடைய மகள் தெய்வானையை, இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்றுதான் கல்யாணம் செய்து தந்தார்.. அதனால்தான், இந்த திருநாளே பங்குனி உத்திர திருநாளாக கொண்டாடப்படுகிறது.
முருகன் கோவில்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுசிறப்பாக தொடங்கியது.. இந்த விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து 15 நாட்களுக்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
முன்னதாக நேற்றிரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்த பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் இன்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெற்றது.
பட்டாபிஷேகம்: இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டு வந்தார்கள்..
ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.. அப்போது, ஏராளமான பெண்களும் தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்... மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனமும் செய்தார்கள்..
தெய்வானை: நாளை அதாவது 29ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.. நாளை காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். இதனால் நாளைய லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மார்ச் 30ம் தேதி தீர்த்தம் பூஜையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications