Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வாங்கிய பாஜக தலைவர் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசினார்.

TN BJP leader Annamalai took blessings from Madurai Adheenam

அப்போது, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். முல்லை பெரியாறு அணையில் 139 அடி வரைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆனால் 136 அடியில் அணையை திறக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

TN BJP leader Annamalai took blessings from Madurai Adheenam

அத்துடன் இடதுசாரிகளுடனான கூட்டணியால் கேரளாவிடம் தமிழக அரசு உரிமைகளை விட்டுக் கொடுக்கிறதா? முல்லை பெரியாறு அணை குறித்து ஏன் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்? என்றும் கேட்டிருந்தார் அண்ணாமலை. புதிய கல்வி கொள்கையில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளது; அதை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது? அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை ஆதீனத்துக்கு அண்ணாமலை சென்றார். மதுரை ஆதீனமானது திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்டது. இதன் 292-வது ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து அண்மையில் காலமானார். இதனையடுத்து 293-வது ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார். அப்போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், பேரூர் ஆதீனம், குன்றக்குடி, திருப்பனந்தாள், சிரவை ஆதீனம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்று மதுரை புதிய ஆதீனத்திற்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இன்று ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளை அண்ணாமலை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இது தொடர்பான படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அண்ணாமலை, 1300 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் பழமையான மடங்களுள் ஒன்று மதுரை ஆதீனம் என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+