மதுரையில் ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்.. மேயர் பிரச்சனைக்கு முடிவு கட்டுவாரா?
மதுரை: மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தில் திறந்து வைத்துள்ளார். அதேபோல் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ள நிலையில், மதுரையின் புதிய மேயர் தொடர்பான முடிவு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்க உள்ளது. இதற்காக மதுரையில் ரூ.10 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கான ஓய்வறை, விஐபி பாக்ஸ், பார்வையாளர்களுக்கான அரங்கம் என்று சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டே திருச்சியில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்ட நிலையில், மதுரையில் தற்போதுதான் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட ஹாக்கி வீரர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று திறந்து வைத்துள்ளார். இதற்காக மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.
இதனிடையே மதுரை மேயர் விவகாரத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் மூலமாக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மதுரை மேயராக இருந்த இந்திராணி பொன்வசந்த் தனது பதவியில் இருந்து விலகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டில் 69 வார்டுகள் திமுக வசம் இருக்கிறது.
ஆனாலும் இதுவரை மேயரை தேர்வு செய்ய முடியாமல் திமுக தலைமை அமைதி காத்து வருகிறது. இதனிடையே இந்தியாவிலேயே அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடத்தில் இருக்கிறது. தற்போது மேயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சிப் பணிகள் ஏராளமானவை முடங்கி போயிருக்கின்றன. இதனால் மதுரை மாவட்ட மக்கள் அதிக இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றன.
புதிய மேயரை கொண்டு வருவதில் அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி ஆகியோர் இடையில் போட்டி நிலவுவதாக தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இப்படியான சூழலில் மதுரை மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார்.
இதனால் மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய மேயருக்கான ரேஸில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள் முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதிலும் வாசுகி சசிகுமார், சரவண புவனேஸ்வரி, லட்சிகா ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications