தென்மாவட்டங்களில் பல மடங்கு உயரும் பாதிப்பு- விருதுநகரில் விஸ்வரூபம்- ஒரே நாளில் 577 பேருக்கு கொரோனா
Subscribe to Oneindia Tamil
மதுரை: தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது. விருதுநகரில் இன்று மட்டும் ஒரே நாளில் 577 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,707. மொத்தம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உள்ளது.
மாவட்டங்களில் சென்னையில் மிக அதிகபட்சமாக 1107 பேருக்கு கொரோனா உறுதியானது. தென்மாவட்டங்களில் இன்று பல மடங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் கொரோனா விவரம்:
- அரியலூர் 17
- செங்கல்பட்டு 365
- சென்னை- 1107
- கோவை- 273
- கடலூர்- 142
- தருமபுரி- 8
- திண்டுக்கல் - 114
- ஈரோடு -11
- கள்ளக்குறிச்சி- 195
- காஞ்சிபுரம் - 223
- கன்னியாகுமரி - 223
- கரூர்- 17
- கிருஷ்ணகிரி- 39
- மதுரை- 346
- நாகப்பட்டினம் - 15
- நாமக்கல் -23
- நீலகிரி - 2
- பெரம்பலூர்- 25
- புதுக்கோட்டை- 128
- ராமநாதபுரம்- 38
- ராணிப்பேட்டை- 198
- சேலம் -124
- சிவகங்கை - 59
- தென்காசி -50
- தஞ்சாவூர்- 209
- தேனி- 283
- திருப்பத்தூர்- 57
- திருவள்ளூர்- 486
- திருவண்ணாமலை- 268
- திருவாரூர் -132
- தூத்துக்குடி- 381
- நெல்லை- 387
- திருப்பூர்- 18
- திருச்சி -149
- வேலூர்- 151
- விழுப்புரம்- 91
- விருதுநகர்- 577












Click it and Unblock the Notifications