டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 'தமிழகத்தில் ஊழல் ஆட்சியை கலைக்க சட்டப்பேரவையில் வாக்களிப்போம்.

அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ். நாங்கள் அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம்.
டிடிவி தினகரன் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். ஏற்கனவே திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று கூறியிருந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.












Click it and Unblock the Notifications