தோட்டத்து மரத்தில் சினேகாவின் பிணம்.. அலறிய குடும்பம்.. உசிலம்பட்டியில் ஒரே பரபரப்பு!
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை: சினேகாவுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை... கல்யாணம் நிச்சயம் செய்த நிலையில், தோட்டத்து மரத்தில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. அந்த கிராமத்திலேயே சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார்... இவரது மகள் சினேகா.. 18 வயதாகிறது.. மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு பயின்று வருகிறார்.
சினேகாவிற்கு வீட்டில் கல்யாணம் நிச்சயித்துள்ளனர்.. வரும் வியாழக்கிழமைதான் திருமண தேதி குறித்துள்ளனர். இந்நிலையில் தனது தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார்.. அங்குள்ள மரத்தில் துப்பட்டாவில் பிணமாக தொங்கியபடி கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு அலறினர்.
உடனடியாக உத்தப்பநாயக்கணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு நாளை விசாரணை
கல்யாண தேதியை குறித்த நிலையில் சினேகாவின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.. இவர் உண்மையிலேயே தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லையா? என்பன உட்பட உத்தப்பநாயக்கணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.