ஹாலில் மாமியார்... ரூமில் கணவர்.. முதல் மாடி ஏறி சென்று லாவண்யாவை குத்தி கொன்ற மர்மநபர்கள்!

மதுரையில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஹாலில் மாமியார்... ரூமில் கணவர் படுத்திருக்க, முதல் மாடியில் ஏறிச் சென்று தூங்கி கொண்டிருந்த லாவண்யாவை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர் மர்ம நபர்கள்! இந்த சம்பவம் மதுரை நகர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் - சீனியம்மாள்-.. சீனியம்மாளுக்கு 58 வயதாகிறது. மாரியப்பன் பாத்திர கடை வைத்திருக்கிறார்.. இவர்களுக்கு குமரகுரு என்ற மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.

போன 2010-ல் மாரியப்பன் இறந்து விட்டார். அதனால் பாத்திரக்கடையை சீனியம்மாள் கவனித்து வருகிறார்.. இவருக்கு உதவியாக குமரகுரு உள்ளார். குமரகுருவிற்கும் கல்யாணம் ஆகிவிட்டது.. மனைவி பெயர் லாவண்யா.. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

Recommended Video

    முகமூடி, துப்பாக்கி.. ஸ்கார்பியோவில் 2 பேர்.. 4 முறை சுடப்பட்ட எஸ்ஐ வில்சன்.. ஷாக்கில் கன்னியாகுமரி - வீடியோ
    சீனியம்மாள்

    சீனியம்மாள்

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லாவண்யா வீட்டின் முதல் மாடியில் மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். வீட்டின் கீழ்பகுதியில் ஒரு ரூமில் குமரகுருவும், ஹாலில் சீனியம்மாளும் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று விடிகாலை 4 மணி இருக்கும்.. 2 மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து.. முதல் மாடிக்கு கதவை உடைத்து கொண்டு சென்றுள்ளனர்.

    கத்தி குத்து

    கத்தி குத்து

    அங்கே தூங்கி கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினர்.. வலியால் லாவண்ய கதற.. சத்தம் கேட்டு மூத்த மகள் எழுந்து அலறினாள்.. கீழே ஓடிப்போய் விஷயத்தை சொல்லவும், ஹாலிலேயே படுத்திருந்த சீனியம்மாள் விரைந்து வந்தார்.

    ரத்த வெள்ளம்

    ரத்த வெள்ளம்

    அதற்குள் மர்மநபர்கள் கீழே இறங்க முயற்சி செய்தனர்.. அவர்களை விடாமல் சீனியம்மாள் இழுத்து பிடித்து தடுத்தார்.. இதனால் ஆவேசம் ஆன மர்மநபர்கள் சீனியம்மாளையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டனர். இதற்கு பிறகுதான் அறையிலிருந்து சத்தம் கேட்டு குமரகுரு ஓடிவந்தார்... அப்போதுதான் அம்மா ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் மாடியில் லாவண்யா இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சொத்துக்கள்?

    சொத்துக்கள்?

    தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. உடனடியாக சீனியம்மாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. சீனியம்மாளுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது. ஆனால் லாவண்யாவை கொன்றவர்கள் யார் என தெரியவில்லை.. எதற்காக இந்த கொலை நடந்தது என்றும் தெரியவில்லை.. இவர்களுக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிகிறது.. அதனால்கூட இந்த கொலை நடந்திருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுவதார் விசாரணை மும்முரமாக நடக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+