மதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்
Recommended Video
மதுரை: மதுரை காவல் ஆணையாளர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் விரட்டி விரட்டி இளைஞரை கொன்ற சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடி மர்ம நபர்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி கொலை நடந்த இடத்திலேயே மடக்கிபிடித்தார்.
மதுரை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு வயது 22. இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் 7 நபர்கள் வந்தனர்.அவர்கள் ஆறுமுகத்தை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்து படுகொலை செய்த மூன்று நபர்களில் பாலமுருகன் என்பவரை கொலை நடந்த சம்பவ இடத்திலேயே மதுரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட பாலமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர் மீது செல்போன் திருட்டு, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல்,என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.மக்கள் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையம் பகுதியில் பட்டப்பகலில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications