காவிரி டெல்டாவில் லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு- கன்னட விவசாயிகள் மிரட்டலால் அரண்டு போன பாஜக!
மண்டியா: காவிரி நதிநீர் பிரச்சனையில் அநீதி இழைக்கப்படுவதால் கர்நாடகாவின் காவிரி டெல்டா பொதுமக்கள் லோக்சபா தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என கன்னட விவசாயிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரக் கூடாது; தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் சொற்ப அளவு போனாலும் கூட குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு செத்து போவோம் என்பது கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினரின் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் 34-வது நாளாக தொடர் போராட்டம் நீடிக்கிறது. கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் இணைந்து மண்டியா நகரில் கடந்த 34 நாட்களாக இடைவிடாமல் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
மண்டியா விஸ்வேஸ்ரயய பூங்கா, மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில்தான் நாள்தோறும் இந்தப் போராட்டங்கள் தொடருகின்றன.
எத்தனை எத்தனை போராட்டம்: ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் நேற்று முன்தினம் கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் மண்டியா கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு: இந்நிலையி காவிரி பிரச்சனையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; காவிரி நதிநீர் தங்களிடம் பறிக்கப்படுகிறது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணர்த்தும் வகையில் கர்நாடகாவின் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக கடும் அதிர்ச்சி: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜகதான் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. தற்போது பாஜகவுடன் புதிய கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது. இன்னொரு பக்கம், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்நிலையில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என கர்நாடகா காவிரி டெல்டா விவசாயிகள் குரல் எழுப்புவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications