Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி டெல்டாவில் லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு- கன்னட விவசாயிகள் மிரட்டலால் அரண்டு போன பாஜக!

Subscribe to Oneindia Tamil

மண்டியா: காவிரி நதிநீர் பிரச்சனையில் அநீதி இழைக்கப்படுவதால் கர்நாடகாவின் காவிரி டெல்டா பொதுமக்கள் லோக்சபா தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என கன்னட விவசாயிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளனர்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரக் கூடாது; தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் சொற்ப அளவு போனாலும் கூட குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு செத்து போவோம் என்பது கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினரின் குற்றச்சாட்டு.

 Karnataka Cauvery Delta Farmers call for boycotting Lok Sabha Election

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் 34-வது நாளாக தொடர் போராட்டம் நீடிக்கிறது. கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் இணைந்து மண்டியா நகரில் கடந்த 34 நாட்களாக இடைவிடாமல் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
மண்டியா விஸ்வேஸ்ரயய பூங்கா, மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில்தான் நாள்தோறும் இந்தப் போராட்டங்கள் தொடருகின்றன.

எத்தனை எத்தனை போராட்டம்: ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் நேற்று முன்தினம் கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் மண்டியா கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு: இந்நிலையி காவிரி பிரச்சனையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; காவிரி நதிநீர் தங்களிடம் பறிக்கப்படுகிறது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணர்த்தும் வகையில் கர்நாடகாவின் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக கடும் அதிர்ச்சி: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜகதான் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. தற்போது பாஜகவுடன் புதிய கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது. இன்னொரு பக்கம், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்நிலையில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என கர்நாடகா காவிரி டெல்டா விவசாயிகள் குரல் எழுப்புவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+