3000 ஆபாச வீடியோ: மங்களூர் விமான நிலையத்தில் இறங்கியதும் பிரஜ்வலை 'தூக்க' ரெடியாக இருக்கும் போலீஸ்!
மங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்கள் எடுத்த பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவின் மங்களூர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்படக் கூடும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு. அத்துடன் பலாத்காரம் செய்த பெண்களை மிரட்டி ஆபாச படங்களையும் எடுத்தார் என்பதும் புகார். இது தொடர்பாக கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குகளில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ளூர் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் சிபிஐக்கு சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவால் இனி தப்பவே முடியாது என்ற நிலையில் ஜெர்மனியில் இருந்து ஒவ்வொரு நாடாகா தப்பிச் செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய தகவல்களின் படி துபாயில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவின் பெங்களூர் அல்லது மங்களூர் விமான நிலையத்துக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பெங்களூர் அல்லது மங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கினால் அங்கேயே பிரஜ்வலை கைது செய்யும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
அப்படி விமான நிலையத்தில் கைது செய்யப்படும் பிரஜ்வல் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவார். அதன் பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் பிரஜ்வலிடம் விசாரணை நடத்துவர்.
துபாயில் இருந்து மங்களூர் விமான நிலையத்துக்கு இரவு 6.15 மணிக்கு கடைசி விமானம் வரும். அனேகமாக இந்த விமானத்தில்தான் பிரஜ்வால் வரக் கூடும் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால் மங்களூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications