Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா: உத்தர கன்னடாவில் பெருமழை- நிலச்சரிவில் சிக்கி தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

மங்களூர்: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடாவில் பெருமழை கொட்டித் தீர்த்ததில் நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 லாரி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தர கன்னடாவின் அங்கோலா அருகே குமட்டா- சிர்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக காத்திருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னண்ணன், சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய 3 தமிழர்கள், கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்தெடுத்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடகாவின் அணைகள் நிரம்பி உள்ளன.

tamilnadu karnataka

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெருமழை பெய்தது. இப்பெருமழையால் அங்கோலா அருகே குமட்டா-சிர்சி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

குமட்டா-சிர்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வீடுகள், சாலையோர ஹோட்டல் ஆகியவை மண்ணோடு மண்ணாக புதையுண்டன. இச்சம்பவத்தில் வீடுகளில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காத்திருந்த 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காத்திருந்த போது 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் கியாஸ் டேங்கர் லாரி ஓட்டுநர்கள். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தாத்தையங்கார்பட்டி சின்னண்ணன், நாமக்கல் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி கரையாம்புதூர் சரவணன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி முருகன் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மங்களூர் எண்ணெய் சுத்தகரிப்பு தொழிற்சாலையில் இருந்து சமையல் எரிவாயுவை உப்பள்ளி என்ற பகுதிக்குக் கொண்டு செல்லும் வழியில் நிலச்சரிவில் சிக்கி 3 தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் கங்கவாலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி மீட்கப்பட்டுள்ளது. 18 டன் சமையல் எரிவாயுவுடன் டேங்கர் லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போதும் எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+