கர்நாடகா: உத்தர கன்னடாவில் பெருமழை- நிலச்சரிவில் சிக்கி தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் பரிதாப பலி!
மங்களூர்: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடாவில் பெருமழை கொட்டித் தீர்த்ததில் நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 லாரி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தர கன்னடாவின் அங்கோலா அருகே குமட்டா- சிர்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக காத்திருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னண்ணன், சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய 3 தமிழர்கள், கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்தெடுத்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடகாவின் அணைகள் நிரம்பி உள்ளன.

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெருமழை பெய்தது. இப்பெருமழையால் அங்கோலா அருகே குமட்டா-சிர்சி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
குமட்டா-சிர்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வீடுகள், சாலையோர ஹோட்டல் ஆகியவை மண்ணோடு மண்ணாக புதையுண்டன. இச்சம்பவத்தில் வீடுகளில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காத்திருந்த 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காத்திருந்த போது 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் கியாஸ் டேங்கர் லாரி ஓட்டுநர்கள். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தாத்தையங்கார்பட்டி சின்னண்ணன், நாமக்கல் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி கரையாம்புதூர் சரவணன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி முருகன் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மங்களூர் எண்ணெய் சுத்தகரிப்பு தொழிற்சாலையில் இருந்து சமையல் எரிவாயுவை உப்பள்ளி என்ற பகுதிக்குக் கொண்டு செல்லும் வழியில் நிலச்சரிவில் சிக்கி 3 தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் கங்கவாலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி மீட்கப்பட்டுள்ளது. 18 டன் சமையல் எரிவாயுவுடன் டேங்கர் லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போதும் எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications