மும்பை கோர்ட்டுக்கு நேரில் வந்த சாஹல்.. தனஸ்ரீ வர்மாவுடன் அவசர அவசரமாக விவாகரத்து.. 2வது திருமணம்?
மும்பை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரபல யூட்யூபரான தனஸ்ரீ வர்மா இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனஸ்ரீ வர்மாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.4.75 கோடி கொடுக்க சாஹல் ஒப்புக் கொண்ட நிலையில், விவாகரத்து வழக்கிற்காக இருவரும் நேரில் ஆஜராகினர்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரபல யூட்யூபரான தனஸ்ரீ வர்மா இருவருக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் பயிற்சி கற்றுக்கொள்ள சென்ற சாஹல், தனஸ்ரீ வர்மாவுடன் நட்பாக இருந்தார். அது நாளடைவில் காதலாக மாறி, திருமணத்தில் முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர்.

பிரபலமான தனஸ்ரீ வர்மா
சாஹலை திருமணம் செய்த பின் இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீ வர்மா பிரபலமடைந்தார். அவரை பின் தொடர்பவரின் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. இதன்பின் இன்ஸ்டாகிராமில் இன்ஃபளூயன்சராக வலம் வந்த அவர், பாடல்களுக்கு நடனமாடி பிரபலமடைந்தார். இதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டான்சராகவே களமிறங்கி கூடுதல் பிரபலமாகினர்.
சாஹல் - தனஸ்ரீ மோதல்
இதன்பின் சினிமாவிலும் கால்பதித்த தனஸ்ரீ, கிரிக்கெட் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதனை முற்றிலும் தனஸ்ரீ மறுத்த நிலையில், சாஹல் - தனஸ்ரீ இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தினர்.
விவாகரத்து
தொடர்ந்து கடந்த பிப்.5ஆம் தேதி மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். அப்போது மனுவை ஏற்ற நீதிமன்றம், 6 மாதம் கால அவகாசம் அளித்தது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கவிருப்பதால் காத்திருப்பு காலத்தை ரத்து செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தை சாஹல் நாடினார்.
ஜீவனாம்சம்
இதனைத் தொடர்ந்து காத்திருப்பு காலத்தை ரத்து செய்ததோடு, மார்ச் 21ஆம் தேதிக்குள் விவாகரத்து வழக்கை முடித்து வைக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல் சாஹல் தரப்பில் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சமாக அளிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதில் ரூ.2.37 கோடி ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும், ரூ.2.38 கோடி மீதித் தொகை விவாகரத்து பெற்றபின் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அவசரமாக விவாகரத்து
இந்த நிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருநாள் மட்டும் இருக்கும் நிலையில், சாஹல் அவசர அவசரமாக விவாகரத்து பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் திருமணம்?
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியின் போது ஆர்ஜே மஹ்வாஷ் என்ற பிரபலத்துடன் சாஹல் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் சாஹல் - ஆர்ஜே மஹ்வாஷ் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதால், அவசர அவசரமாக விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications