தனிமை முகாமில் இருந்த.. 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த கயவன்.. மும்பையில் நடந்த கொடுமை

தனிமைப்படுத்தும் முகாமில் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: தனிமை எங்கே இருந்தாலும் பிரச்சனைதான்.. தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே தொற்று அதிகமாக இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா.. அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையத்தில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அப்படி பன்வேல் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்தவர்தான் 40 வயது பெண்.. அவரை ஒரு காம மிருகம் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்துள்ளது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று, குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

40 year old woman raped at quarantine facility in panvel

இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "சம்பவம் நடந்த மையத்தில் சுமார் 400 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... இந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 40 வயது பெண் பலாத்காரத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளோம்.. குற்றவாளியையும் கைது செய்துள்ளோம்" என்றார்.

ஆனால், இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து. கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.. சில தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடு கிடைப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் என்பது தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்காக நகராட்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பகுதி ஆகும்.. பார்ப்பதற்கு குடியிருப்புகள் போல தான் இருக்கிறதாம்.. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு ரூம் தரப்பட்டுள்ளது.. அப்படி தரப்பட்ட ரூமில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. குற்றவாளியின் சகோதரர் இங்குதான் தனிமைப்பட்டுள்ளார்.

முகாமில் எல்லா வசதிகளும் உள்ளதா என்பதை சரிபார்த்து கொண்டு வந்தவர், 40 வயது பெண்ணை பார்த்ததும் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டு, நைசாக பேச்சு தந்துள்ளார்.. பிறகு நெருக்கத்தை வளர்த்து கொண்டு, சந்தர்ப்பம் பார்த்து இப்படி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பன்வேல் தாலுகா போலீஸார், அந்நபரை கைது செய்துள்ளனர்.. மேலும் அவருக்கு உடனே டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டது.. குற்றவாளிக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம்.. தனிமைப்படுத்தும் முகாமிலேயே 40 வயது பெண்ணை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+