அடேங்கப்பா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு கொரோனா.. முழு லாக்டவுன் கொண்டு வர முடிவு?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,50,000-க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பதிவாகி உள்ளது.

63,294 people have tested covid 19 positive in a single day In Maharashtra

அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 63,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதவாது கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் ஒரு மாநிலத்தில் அதுவும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுதான்.

63,294 people have tested covid 19 positive in a single day In Maharashtra

கொரோனாவில் இருந்து மேலும் 34,008 பேர் குணமடைந்தனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 5,65,587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 34,07,245 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 27,82,161 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.மொத்த உயிரிழப்பு 57,987 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சியினர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+