Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உருக்குலைக்கப்பட்ட இஸ்ரேல்! 'தொடர்பு' துண்டிக்கப்பட்ட நடிகை.. பதறிய பாலிவுட் திரை உலகம்- க்ளைமாக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்தி வரும் யுத்தம் காரணமாக அங்கு சிக்கியிருந்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா குறித்த தகவல்கள் தெரியாமல் பதற்றம் ஏற்பட்டது. தற்போது நுஷ்ரத் பருச்சா பாதுகாப்பாக இந்தியா திரும்பி உள்ளார்.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் ஜிஹாதிகள் அதிதீவிர யுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு இஸ்ரேல் தரப்பும் சரமாரியான பதிலடி கொடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் இருதரப்பிலும் 500க்கும் அதிகமானோர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

 Actress Nushrratt Bharuccha arrives at Mumbai from Israel

100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான இந்த யுத்தம் முன்னெப்போதையும் விட மிக உக்கிரமாக இருந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகளை ஹமாஸ் ஜிஹாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் அத்தனை பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்; அப்படி விடுதலை செய்யப்படாவிட்டால் பிணைக் கைதிகளை கொல்வதற்கு நேரம் எடுக்காது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதனிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டும் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தி வருகிறது.

இஸ்ரேலில் நடிகை நுஷ்ரத் பருச்சா: இந்நிலையில் இஸ்ரேலில் நடைபெறும் 39-வது ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா அங்கு சென்றிருந்தார். நுஷ்ரத் பருச்சா நடித்த அகெல்லி திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இஸ்ரேல் சென்றிருந்தார்.

நுஷ்ரத் பருச்சாவால் பதற்றம்: தற்போதைய யுத்தத்தின் நடுவே நுஷ்ரத் பருச்சாவும் சிக்கிக் கொண்டதாக அவருடன் சென்ற சிலர் தகவல் அனுப்பினர். இதனால் நுஷ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள பாலிவுட் திரை உலகம் பல முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் நுஷ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள முடியாததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

திரைப்படம் போலவே : இத்தனைக்கும் நுஷ்ரத் பருச்சா நடித்த அகெல்லி திரைப்படம் ஈராக் பாலைவனத்தில் ஒருவித அசாதாரண சூழலில் சிக்கும் நபர் பாதுகாப்பாக வெளியேறுவதை மையமாகக் கொண்டது. தற்போது அதே சூழ்நிலையில் நுஷ்ரத் பருச்சாவும் சிக்கியது பாலிவுட் திரை உலகை அதிர்ச்சி அடைய வைத்தது.

மும்பை திரும்பினார் நுஷ்ரத் பருச்சா: இப்பதற்றத்தின் பின்னணியில் இன்று பிற்பகல் நுஷ்ரத் பருச்சா, பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போதும் எந்த கருத்தையும் நுஷ்ரத் பருச்சா தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+