நல்ல வேளை எங்கள் கூட்டணியில் ஜோதிராதித்ய சிந்தியா போன்றோர் இல்லை.. சொல்வது யாருனு பாருங்க!
மும்பை: நல்ல வேளை எங்கள் கூட்டணியில் ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர் இல்லை என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சட்டசபையில் நேற்று பேசினார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் நேற்றைய தினம் பட்ஜெட் தொடரின் போது பாஜக முன்னாள் அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம் என சட்டசபையில் கூறினார்.
இதையடுத்து பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான அஜித் பவார் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது என்றார்.

எம்எல்ஏ
இதையடுத்து அங்கு இருந்த முதல்வர் உத்தவ் தாக்கரே சிரித்தார். பின்னர் பவார் தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசும் போது ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர் நமது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இல்லை. பாஜக தற்போது சட்டசபையில் இல்லாத அவர்களது எம்எல்ஏக்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது என கூறினார்.

அஜித் பவார்
அப்போது குறுக்கிட்டு பேசிய சுதீர் முங்கண்டிவார், பாஜக சிவசேனாவை புறந்தள்ளிவிட்டதாக நான் வேடிக்கையாக கூறினேன். இது அஜித்பவாருக்கு பொருந்தியதால், அவர் அதை பயன்படுத்திக் கொண்டார் என்றார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு எம்எல்ஏக்களுக்கு அஜித் பவார் அறிவுறுத்தினார்.

அதிருப்தி
மேலும் எம்எல்ஏக்கள் கொரோனா பாதிப்பு தொடர்பாக எந்த நேரத்திலும் மந்த்ராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றார். ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது அவர் பாஜகவில் இணைந்தார். முதல்வர் பதவி, கட்சி பதவி கொடுக்கவில்லை என்ற அதிருப்தியால் அவர் இவ்வாறு செய்து விட்டார்.

ஆட்சி கவிழும்
இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது. பாஜகவுக்கு சென்ற சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படுகிறது. சிந்தியாவை கிண்டல் செய்யும் அஜித் பவாரும் முன்னர் இதுபோல்தான் இருந்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைய காங்கிரஸ், என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டு அதிகாலையில் விடிந்தும் விடியாமல் பாஜக தயவுடன் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

வேடிக்கை
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே பாஜக அரசு கவிழ்ந்தவுடன் சிவசேனை பக்கம் சென்று அதே துணை முதல்வர் பதவியையும் பெற்றுக் கொண்டார். இவர் என்சிபி தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். தன்னிடம் நம்பி கொடுத்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை பாஜகவிடம் கொண்டு சேர்த்த இவர் இன்று சிந்தியாவை பற்றி பேசுவது வேடிக்கையாக இருப்பதாக கூறிவருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications