கட்சி மாறும் முக்கிய "தலை.." மகாராஷ்டிரா தேர்தலில் இதுதான் கேம் சேஞ்சர்.. சரத் பவார் போடும் பிளான்
மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மிக முக்கிய தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் சேரவுள்ளதாக சரத் பவார் என்சிபி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவோம் என்றும் சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

அங்கே எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ், தாக்ரே சிவசேனா மற்றும் சரத் பவார் என்சிபி ஆகிய கட்சிகள் உள்ளன. அங்கு வரும் நவ. மாதம் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
சரத் பவார் தரப்பு: இதற்கிடையே சரத் பவாரின் என்சிபி தரப்பு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், வேறு ஒரு கட்சியில் இருக்கும் மிக முக்கிய தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் இணைய உள்ளதாக என்சிபி சரத் பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார். அங்கு சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் யார் அந்த தலைவர்.. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்களைப் பகிர ஜெயந்த் பாட்டீல் மறுத்துவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், பல தலைவர்கள் சரத் பவார் என்சிபி கட்சியில் இணைய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மகாராஷ்டிர அரசியல்: மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆட்சியில் உள்ளன. இந்த அரசு செயல்பட்ட விதம் குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சரத் பவார் தரப்பு என்சிபி செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், "தற்போதுள்ள என்டிஏ கூட்டணி ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நான் அடித்துச் சொல்கிறேன் இந்த கூட்டணி மகாராஷ்டிர தேர்தலில் 100 சீட்களுக்கு மேல் பெறாது.
கடும் அதிருப்தி: மத்திய அரசு மீது மகாராஷ்டிர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எதிர்ப்பு வெளிப்படையாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த தலைவர்கள் வரும் போது இந்த எதிர்ப்பு அதிகரிக்கவே செய்கிறது. இந்த தேர்தலில் அவர்கள் எத்தனை சதவிகித வாக்குகள் வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்தாலே இது உங்களுக்குப் புரியும். என்னைக் கேட்டால் குறைந்தது 10% வரை அவர்கள் வாக்கு வங்கி குறையும்.
பாஜகவை பொறுத்தவரை எப்போதும் அவர்கள் டெல்லி தலைவர்களே வைத்தே வாக்காளர்களைக் கவர்வார்கள். அவர்களையே பாஜக பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் இந்த முறை மகாராஷ்டிர மக்கள் அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அங்குள்ள மக்களுக்கு இப்போது வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை.. ஆனால், இப்போதுள்ள அரசு அதைத் தரவில்லை. இதுவும் ஒரு காரணம்.
மேலும், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரின் எம்எல்ஏக்களை தங்கள் வசப்படுத்தி அரசியலமைப்பிற்கு விரோதமான கூட்டணியை மகாராஷ்டிராவில் உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகவும் மகாராஷ்டிர மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications