கண்ணை மூடி தவம்.. கடித்து குதறிய சிறுத்தை.. துறவியின் பரிதாப முடிவு
காட்டில் தவம் செய்த புத்த துறவியை சிறுத்தை கொன்றது.
மும்பை: நடுக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியை சிறுத்தை கடித்து குதறி எடுத்து கொன்றே விட்டது!!
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் ராம்தேகி என்ற ஒரு காடு உள்ளது. இந்த காட்டில் நிறைய வனவிலங்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது நாக்பூரிலிருந்து 150 கி,மீ, தொலைவுக்கு தள்ளி உள்ளது. இந்த காட்டுக்கு நடுவில் ஒரு புத்த மத கோயில் உள்ளது. அதனால் புத்த துறவிகள் மட்டும் இங்கு அடிக்கடி வந்து போவார்கள்.

மரத்தடியில் தவம்
இப்படித்தான் போன மாசம் ராம் வால்கே என்ற ஒரு புத்த துறவி இந்த கோயிலுக்கு போனார். அவருக்கு 35 வயது இருக்கும். அந்த காடு, கோயில் என எல்லாமே இவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதனால் கோயிலுக்கு போய் திரும்பி வந்துவிடலாம் என்று நினைத்தவர், அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு தவம் செய்ய ஆரம்பிச்சிட்டார்.

அதிகாரிகள் எச்சரிக்கை
அதனால் அவருக்கு சாப்பாடு மட்டும் 2 துறவிகள் வந்து கொடுத்து விட்டு போவார்கள். துறவி காட்டுக்குள் தவம்செய்வதை கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், நிறைய விலங்குகள் இங்கு நடமாடுவதால், தவம் செய்ய வேண்டாம், ரொம்பவும் ஆபத்து என்று எச்சரித்தார்கள்.

சிறுத்தை பாய்ந்தது
ஆனாலும் துறவி கேட்கவே இல்லை. இன்னும் கொஞ்ச நாள் மட்டும் தவம் செய்துவிட்டு போய்விடுகிறேன் என்று சொல்லி மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி அந்த காட்டில் நடமாடிய சிறுத்தை ஒன்றின் கண்ணில் துறவி பட்டுவிட்டார்.

கடித்து குதறியது
துறவியை பாய்ந்து தாக்கிய சிறுத்தை, அவரை கடித்து குதறியது. இதில் துறவி தவம் செய்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து புத்த கோயிலுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் துறவிகள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த கோயிலில் சோலார் மின்வேலியும் அமைத்துள்ளார்கள்.

2 துறவிகள் எங்கே?
ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கையையும் மீறி காட்டுக்குள் சென்றுள்ளதாக தெரிவித்த போலீசார், அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த 5-வது தாக்குதல் சம்பவம் இது எனவும் தெரிவித்தனர். துறவிக்கு சாப்பாடு தந்த மற்ற 2 துறவிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
கம்பீரை காப்பாற்றிய சஞ்சு.. "அந்த" 9 ஓவர் சேட்டன் ஆட்டத்தை கவனிச்சீகளா.. இங்க விஷயமே இதுதான்! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
இஸ்லாமிய நாடுகளே மாறி மாறி தாக்கிக்கொள்வது ஏன்? அதென்ன சன்னி - ஷியா வேறுபாடு.. ஒரு சிம்பிள் விளக்கம் -
நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்.. ராகுலை எதிர்க்க முடிவெடுத்த ஸ்டாலின்.. போர் ஆமாம் போர்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
இடுப்பில் மது பாட்டில்.. மோடி போதை ஒழிப்பு பற்றி பேசிய NDA பொதுக்கூட்டத்திலேயே.. இதென்ன சோதனை? -
"இந்து, முஸ்லீம், ஏசு.." வெஸ்ட் இண்டீஸை ஓடவிட்ட கையோடு சஞ்சு சாம்சன் செய்த செயல்! டிரெண்டிங் -
"பிடிச்சு வெளுத்து விடுங்க யுவராஜ் பாய்.." அபிஷேக் சர்மாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்- மீம்ஸ்! -
சகட்டுமேனிக்கு தாக்கும் ஈரான்.. இஸ்ரேலுக்காக வளைகுடா நாடுகளை அமெரிக்கா கைவிட்டு விட்டது.. சவுதி அதிகாரி பகீர் -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்!












Click it and Unblock the Notifications