உத்தவ் vs ஷிண்டே.. மகாராஷ்டிராவில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. தீவிர வாக்குப்பதிவு
இந்த இடைத்தேர்தலின் வெற்றி/தோல்விகள் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதே ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மும்பை: மகாராஷ்டிராவின் கஸ்பா பெத் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் தேர்தலில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
கஸ்பா பெத் தொகுதி எம்எல்ஏ முக்தா திலக் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் தொகுதி எம்எல்ஏ லட்சுமண் ஜக்தாப் ஆகியோர் காலமானதைத் தொடர்ந்து இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் உத்தவ் தாக்ரே தரப்பு என இரண்டாக பிரிந்துள்ளதால் இருதரப்பினரும் கட்சியின் சின்னமான 'வில் அம்புக்கு' சண்டையிட்டு வந்தனர். இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சின்னத்தில் எந்த தரப்பினர் நிற்பது என்று குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த 19ம் தேதி இந்த சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுபுறம் இடைத்தேர்தல் வரை உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவுக்கு 'சுடர் ஜோதி' சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் கூறியது.

தேர்தல்
இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், என்சிபி தலைவர் சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், என்சிபி தலைவர் அஜித் பவார், சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் மேற்குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரசாரம் முடிவடைந்த நிலையில், இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 5 மணியளவில் முடிவடைகிறது. இரண்டு தொகுதிகளும் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்கள்
கஸ்பா மற்றும் சின்ச்வாட் தொகுதிகளில் சுமார் 510 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கஸ்பா தொகுதியில் மட்டும் 2,75,428 வாக்காளர்கள் இருக்கின்றனர். சின்ச்வாட் தொகுதியில் 5,68,954 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. புனே நகரில் அமைந்துள்ள கஸ்பா தொகுதியில் பாஜக ஆதரவுடன் ஹேமந்த் ரசானே போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸின் ரவீந்திர தங்கேகர் களமிறங்கியுள்ளார்.

உத்தவ் தாக்ரே தரப்பு
இதேபோல சின்ச்வாட் தொகுதியில் பாஜகவின் அஷ்வினி ஜக்தாப் களம் இறங்கியுள்ள நிலையில் அவருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸின் நானா கேட் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்ரே அணி போட்டியிடவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தொடர் பிரசாரத்தை ஆதித்யா தாக்ரே மேற்கொண்டிருந்தார். இந்த இடைத்தேர்தலில் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கஸ்பா தொகுதியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

போராட்டம்
சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறிய நிலையில், அவர் இந்த போராட்டத்தை கைவிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கு துணை முதலமை்ச்சர் தேவிந்திர ஃபட்னாவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், "நாங்கள் தோற்கும் நிலை வந்தாலும் கூட இதுபோன்று பண விநியோகத்தில் ஈடுபட மாட்டோம். தோல்வி பயத்தில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற போலியான குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
-
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்












Click it and Unblock the Notifications