பாக்., வங்கதேச அகதிகளுக்கு ஒரு நியாயம், இலங்கை தமிழர்களுக்கு ஒரு நியாயமா.. சரத் பவார் கேள்வி
மும்பை: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் போது இலங்கை தமிழர்களுக்கு இல்லாதது ஏன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் 2015-ஆம் ஆண்டு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம்.
இந்த திருத்தத்தில் முஸ்லீம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யவில்லை.

புனேவில்
இதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிறுபான்மையினர்
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவை நாடு சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்திகள் ஆகும்.

இலங்கைத் தமிழர்கள்
இந்த சட்டத்தை சிறுபான்மையினர் மட்டும் எதிர்க்கவில்லை.
நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்காக கவலைப்படுவோரும் இதை எதிர்க்கின்றனர்.

தமிழர்கள்
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படுவது ஏன்? இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications