சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்.. நடிகைக்கு எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்த சிபிஐ
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சிபிஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கை போ சே, சிச்சோரே, தோனியின் சுயசரிதை படமான எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களின் மூலமாக தமிழ்நாட்டிலும் அதிக பிரபலமடைந்தவர். இவர் 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் நடிகரான இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பலரும் கேள்வியை எழுப்பினர். இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத் உடற்கூராய்வு நடத்திய குழுவில் இருந்த ரூப்குமார் ஷா, சுஷாந்த் சிங் ராஜ்புத் உடலில் காயங்கள் இருந்தது என்று அதிர்ச்சியை கிளப்பினார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு சிபிஐ வசம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை தரப்பில் நடிகை ரியா சக்கரபோர்டி மீது குற்றம்சாட்டப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ரியா சக்கரபோர்டி இருவரும் காதல் உறவில் இருந்து பிரிந்தனர். இதனால் நடிகை ரியா சக்கரபோர்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் சிபிஐ தரப்பில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம்.
அதேபோல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் நடிகை சியா சக்கரபோர்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் கிடையாது. சோஷியல் மீடியாவில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு பின் பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் ஒதுக்க தொடங்கினர். பாலிவுட் மாஃபியா என்று சொல்லப்படும் சிலரே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு காரணம் என்றும், நெப்போடிஸத்தை வளர்க்கும் அவர்களால் சுஷாந்த் சிங் ராஜ்புத்-க்கு அழுத்தம் ஏற்பட்டதாக ரசிகர்கள் கடுமையாக விவாதித்து வந்தனர். தற்போது சிபிஐ அறிக்கையால், அவரின் மரணம் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications