Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.800 கோடி மோசடி.. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி மற்றும் ஊழல் நடந்ததாகக் கூறி, சிபிஐ கடந்த 2024ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கில் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் (TCE) நிறுவனத்தை இணைத்திருக்கிறது.

கப்பல்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் எளிதாக வந்து செல்லவும், பெரிய சரக்குக் கப்பல்களைக் கையாளவும் துறைமுகத்தின் ஆழம் பராமரிக்கப்படுவது அவசியம். அதாவது துறைமுக பகுதியில் தொடர்ந்து கடல் ஆழப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இந்தப் பணிகள் அதிக செலவு பிடிக்கும் மற்றும் பெரிய ஒப்பந்தங்களைக் கொண்டவை.

Tata CBI

இந்த திட்டத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், ஒப்பந்த நடைமுறைகள், தரம் மற்றும் செலவினக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் ஆலோசனை வழங்கி, மேற்பார்வையிட வேண்டும் என்று டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டது. ஆனால், இதில் பெரிய முறைகேடுகள் மற்றும் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

இப்போது இந்த வழக்கில் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்நிறுவனம், துறைமுக அதிகாரிகளுடன் இணைந்து, குற்றச் சதி செய்துள்ளது. இதன் மூலம், ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தங்களை சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கியுள்ளனர். இதனால் துறைமுகத்திற்கு ரூ.800 கோடி என பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்திருக்கிறது. எனவேதான் டாடா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதேபோல சர்வதேச கடல்சார் பொறியியல் நிறுவனமான, 'மெஸ்ஸர்ஸ் போஸ்காலிஸ் ஸ்மிட்' (M/s Boskalis Smit)நிறுவனமும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

முதல் கட்டம்: 2010 முதல் 2014 வரை
இரண்டாம் கட்டம்: 2012 முதல் 2019 வரை

என இரண்டு கட்டங்களாக துறைமுகம் ஆழப்படுத்தும் பணிகள் நடந்தன. இந்த காலத்தில்தான் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ கூறுகிறது. இதனை தி வயர் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே ஏர் இந்தியா விபத்தில், டாடா நிறுவனத்தின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது துறைமுக ஊழல் வழக்கிலும் TCE பெயர் அடிப்பட்டிருப்பது, பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+