உச்சத்தில் கொரோனா... தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க... மத்திய அரசு அதிரடி திட்டம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இந்த அலை மிக மோசமாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தினசரி வைரஸ் பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டது.

கோவாக்சின் தடுப்பூசி

கோவாக்சின் தடுப்பூசி

இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தன. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தர்.

உற்பத்தியை தொடங்க அனுமதி

உற்பத்தியை தொடங்க அனுமதி

அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரே நன்றி

உத்தவ் தாக்கரே நன்றி

தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்ததற்கு மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் நிறுவனம் இதற்கான தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளும். இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியாவிலேயே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 36.39 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அங்கு 60 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பு 349ஆகப் பதிவாகியுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் 6.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+