மகாராஷ்டிராவிலும் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. ஓடிவரும் காங்.. என்சிபி தலைகள்... முதல்வர் பதில்
மும்பை: மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து வருவதாக சரத்பவார் குற்றம்சாட்டிய நிலையில், அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு அந்த கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலரும் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வருமான வரித்துறையின் ரெய்டுக்கு பயந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும காங்கிரஸ் முன்னணி தலைவர்கள பாஜகவில் இணைந்து வருவதாகவும், இதற்கு பாஜகவின் அழுத்தம் தான் காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறுகையில், "லோக்சபா தேர்தலுக்கு முன்பு இருந்தே மத்திய அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜகவில் இணையுமாறு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது மகாராஷ்டிராவுடன் முடிந்துவிடாது. நாடு முழுவதும் நடக்கும்" என எச்சரித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டுமே சேர்ப்போம். வருமான வரித்துறை விசாரணை மற்றும் வேறு ஏதேனும் விசாரணையில் உள்ளவர்களை நாங்கள் சேர்க்க மாட்டோம். நாங்கள் பாஜகவில் சேருமாறு யாரையும் அழைக்கவோ, துரத்தவோ தேவையில்லை. அவர்களாகவே எங்களை அணுகுகிறார்கள்.
கட்சியில் இணையுமாறு பாஜக யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட ஏராளமான சர்க்கரை ஆலைகளுக்கு அரசு உதவியுள்ளது. எங்களுடன் சேருவதாக பலரும் கேட்டுள்ளார்கள். இது தொடர்பாக பெரிய லிஸ்டே உள்ளது. ஆனால் நாங்கள் ஒருவரிடமும் பாஜகவில் சேருமாறு கேட்கவில்லை. சரத்பவார் தன்னுடைய சொந்த கட்சிக்குள் நடப்பது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications