மும்பையில் கொரோனாவுக்கு 2 போலீசார் பலி- காவல்துறையினர் கடும் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: கொரோனா தொற்று நோய்க்கு மும்பையில் முதல் முறையாக 2 போலீசார் உயிரிழந்திருப்பது காவல்துறையினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் மிக மோசமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அதுவும் மும்பையில் கொரோனா தாக்கமும் உயிரிழப்பும் பெருந்துயரமாக இருந்து வருகிறது.

மும்பையில் தமிழர் வாழும் தாராவி பகுதியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் கொரோனாவுக்கு 2 போலீசார் பலியாகி உள்ளனர்.
மும்பையில் முதல் முறையாக போலீசார், கொரோனா தாக்குதலில் பலியாகி உள்ளனர். இரண்டு பேருமே தலைம கான்ஸ்டபிள்கள். இருவரது மரணமும் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மும்பை நகரத்தில் ஏற்கனவே 40 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகத்தின் முக்கிய நகரங்கள் - வீடியோ












Click it and Unblock the Notifications