மே மாசத்தில் இந்தியாவில் கொரோனா உச்சத்தைத் தொடுமாம்.. பீதி கிளப்புறாங்களே

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தைத் தொடும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Recommended Video

    மூன்றாம் நிலைக்கு நுழைஞ்சுட்டோம்... திருவண்ணாமலை கலெக்டர் உருக்கமான வீடியோ

    தற்போது இந்தியாவில் பரவி வரும் இந்த வைரஸின் தாக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவர ஆய்வின் இறுதியில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேச நிறுவமான புரோட்டிவிட்டி தெரிவித்துள்ளது.

    டைம்ஸ் நெட்வொர்க்குடன் இணைந்து புரோட்டிவிட்டி இதுதொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் இறுதியில் மே மாத மத்தியில் கொரோனாவைரஸ் தாக்கம் இந்தியாவில் உச்சத்தைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசியூ வசதி

    ஐசியூ வசதி

    இந்தியாவில் தற்போது உள்ள 30,000 கேஸ்கள் என்ற நிலை மே மாத மத்தியில் 2,86,000 லட்சமாக உயரும். பாதிக்கப்பட்டோரில் 30 சதவீதம் பேருக்கு ஐசியூ வசதி தேவைப்படும் நிலையில் இருப்பார்களாம். பாதிக்கப்பட்டோரின் சதவீதம், பாதிக்கப்பட்டு மீண்டோரின் எண்ணிக்கை அடிப்படை உள்ளிட்ட மொத்தம் 3 விதமான காரணிகளை வைத்து இந்த முடிவுக்கு புரோட்டிவிட்டி - டைம்ஸ் நெட்வொர்க் குழு வந்துள்ளது.

    மாநிலங்கள்

    மாநிலங்கள்

    பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் இந்த நோய்த் தாக்கம் தேசிய அளவில் தொடரவே செய்யும் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆகஸ்ட் கடைசி வரை இது தொடரலாம். சில மாநிலங்கள் மே கடைசி அல்லது ஜூன் முதல் வாரத்தில் இதிலிருந்து மீள வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக அளவிலான பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களில் தீவிரம் குறைய நிறைய நாட்கள் பிடிக்கும்.

    ஆய்வு

    ஆய்வு

    மத்திய அரசு வழங்கும் புள்ளிவிவரங்கள், அரசு தரும் தகவல்கள் மற்றும் தினசரி சுகாதாரத் துறை வெளியிடும் செய்திக்குறிப்புகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து டைம்ஸ் நெட்வொர்க் குழும நிர்வாக இயக்குநர் எம்.கே. ஆனந்த் கூறுகையில், நமது காலத்தில் நாம் சந்தித்துள்ள மிகப் பெரிய வரலாறு காணாத சமூகப் பொருளாதார தாக்கத்தை சந்தித்துள்ளோம் என்றார்.

    கன்டெய்ன்மென்ட் பகுதிகள்

    கன்டெய்ன்மென்ட் பகுதிகள்

    லாக்டவுன் நீடிப்பதும், கன்டெய்ன்மென்ட் பகுதிகளைத் தொடர்வதும் இந்த பேராபயத்திலிருந்து நம்மைக் காக்க உதவும். எனவே அதை குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்தாக வேண்டும். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் மிகவும் துரிதமாக களம் இறங்கி விட்டோம். முன்கூட்டியே இறங்கி விட்டோம். அது பாராட்டுக்குரியது. மேலும் முன்கூட்டியே நாம் ஆயத்த நிலையில் இதை அணுகியதும் பாராட்டுக்குரியது என்றும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+