6 மணி நேரம்.. நடிகை தீபிகா படுகோனிடம் தீவிர விசாரணை நடத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள்
மும்பை: போதை மருந்து தொடர்பு குறித்து நடிகை தீபிகா படுகோனிடம், மும்பையில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
மும்பையில், நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு போதை மருந்து சப்ளை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சிபிஐயும் களத்தில் குதித்தது. இது பற்றிய விசாரணையின்போது, சினிமா உலகில் நிலவும் போதை மருந்து பழக்கம் பற்றி தினமும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில், சுஷாந்த் காதலியும் நடிகையுமான, ரேகா ஏற்கனவே சிறையில் உள்ளார்.

தீபிகா படுகோன்
போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்திய நிலையில், பாலிவுட் முன்னணி நடிகையான, தீபிகா படுகோனுக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கோவா டூ மும்பை
கோவாவில் இருந்தார் தீபிகா படுகோனே. சம்மன் கிடைத்ததும், நேற்று காரில் கிளம்பி ஏர்போர்ட் சென்று, அங்கிருந்து விமானத்தில், மும்பை வந்தார். இந்த நிலையில் மும்பை கொலபாவிலுள்ள துறைமுக அறக்கட்டளை விருந்தினர் மாளிகையில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் காலை 9.45 மணி முதல் விசாரணையை துவக்கினர். தொடர்ந்து 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

கணவரோடு வருகை
அலுவலகத்திற்கு தீபிகாவுடன் அவர் கணவரான நடிகர், ரன்வீர் சிங்கும் வருகை தந்தார். தீபிகா படுகோனிடம் 2017ம் ஆண்டு நடிகர்-நடிகைகளிடையே நடந்த வாட்ஸ்அப் குரூப் உரையாடல் பற்றி விசாரிக்கப்பட்டது. அந்த வாட்ஸ்அப் உரையாடலில் போதை மருந்து பற்றி பேசப்பட்டுள்ளது. இன்றைய விசாரணைக்கு பிறகு மீண்டும் தீபிகாவிடம் விசாரிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தீரன் அதிகாரம் 1 திரைப்பட புகழ் ரகுல் பிரீத் சிங், நடிகைகள் சார அலி கான், சாரதா கபூர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

விசாரணைகள்
இதில் ரகுல் பிரீத் சிங்கிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. நேற்று 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தி விவரங்கள் கேட்கப்பட்டன. மற்ற இருவரும், இன்று பிற்பகலில் ஆஜராகும் வாய்ப்பு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications