ஏன் ஓடி ஒளிகிறார்.. எதை மறைக்கிறார்.. சுஷாந்த் சிங் மரணத்தில் குறி வைக்கப்படும் காதலி ரியா.. மர்மம்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக அவரின் காதலில் ரியா சக்ரபோர்த்தி பேசி வருவது நிறைய சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, யாரவது அவரை தற்கொலை செய்ய தூண்டினார்களா, அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளது . கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.

நிறைய காரணம்
இவரின் தற்கொலைக்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது. மன அழுத்தத்தில் இவர் கஷ்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்று கூறப்பட்டது. மும்பை போலீஸ் இவரின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பீகாரில் சுஷாந்த் சிங் தந்தை கேகே சிங் புகார் அளித்துள்ளார்.

என்ன புகார்
கேகே சிங் புகாரில், என் மகனை அவரின் காதலி ரியா ஏமாற்றிவிட்டார். பண ரீதியாக ரியா சுஷாந்த் சிங்கை ஏமாற்றி விட்டார், சுஷாந்த் சிங்கை மனரீதியாக ரியா கொடுமைப்படுத்தினார் என்று சுஷாந்த் சிங் தந்தை கேகே சிங் புகார் வைத்துள்ளார். சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து 15 லட்சம் ரூபாய் மாயமாகிவிட்டது என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பீகார் அரசின் கோரிக்கையின் பெயரில் சிபிஐ போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு தற்போது சுஷாந்த் சிங் காதலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இதில் சிபிஐ விசாரணையை மேற்கொள்ள கூடாது. இது உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எதிரானது. இந்த வழக்கு மும்பையில் பதியப்பட்டு இருக்கிறது. அதனால் மும்பை போலீஸ் மட்டுமே விசாரிக்க வேண்டும். சிபிஐ இதை விசாரிப்பது மாநில உரிமைக்கு எதிரானது.

எதிரான கொலை
சிபிஐ விசாரணையை நடந்தால் இதில் நியாயமாக இருக்காது. பீகார் அரசின் அழுத்தத்தின் பெயரில் இந்த விசாரணை நடக்கிறது. கே கே சிங் ஒரு போலீஸ் என்பதால் அவர் கொடுத்த அழுத்தத்தால் இந்த விசாரணை நடக்கிறது. மும்பை போலீஸ் மட்டுமே இதை விசாரிக்க வேண்டும். பீகார் அரசு இதில் அரசியல் செய்கிறது என்று ரியா குறிப்பிட்டு இருக்கிறார்.

சந்தேகம் வலுக்கிறது
சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு எதிராக அவரின் காதலில் ரியா சக்ரபோர்த்தி பேசி வருவது நிறைய சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் தற்போது ரியா மீது சந்தேகம் வலுக்கிறது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். தான் தவறு செய்யவில்லை என்றால் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தான், ஏன் ஓடி ஒளிகிறார், எதை மறைகிறார் என்று கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

சரமாரி கேள்விகள்
அதேபோல் சுஷாந்த் சிங் கணக்கில் இருந்த 15 கோடி ரூபாய் பணம் எங்கே சென்றது. அதை ரியா எடுத்துவிட்டாரா. ரியா ஏன் சுஷாந்த் சிங் போன் நம்பரை பிளாக் செய்தார், என்று நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள்.. ஆனால் ரியா சக்ரபோர்த்தி பேசுவதை பார்க்கும் போது அவர் எதையோ மறைப்பது போல இருப்பது நெட்டிசன்கள் சந்தேகிக்கிறார்கள்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications