இன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறிய மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலம்!
Recommended Video

மும்பை: மும்பை தாக்குதல்.. அஜ்மல் கசாப்.. ஞாபகம் இருக்கா.. அன்று கசாப் பயன்படுத்திய அதே நடை மேம்பாலம்தான் இன்றைக்கு பல உயிர்களை காவு வாங்கியுள்ளது.
சத்ரபதி ரயில் நிலைய பாலம்... 1984 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த நடைமேடை பாலம். பழுது எதுவும் பார்க்கப்படவில்லை. போன வருஷம் பெய்த மழையில் முற்றிலும் இந்த பாலம் நாசமாகி கிடந்தது.
அதனால்தான் நேத்து ராத்திரி இந்த நடைமேடை பாலம் இடிந்து 6 பேர் அநியாயமாக உயிரிழந்து விட்டனர். மும்பை சத்ரபதி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோர் தாக்குதலை முடித்துவிட்டு இந்த பாலம் வழியாகத்தான் வெளியேறித் தப்பினர் என்பது மறக்க முடியாத ஒரு சம்பவம்.

தீவிரவாதிகள்
தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டு 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி படகு மூலம் 10 தீவிரவாதிகள் மும்பைக்கு வந்து தாக்குதலை நடத்தினர்.

இதே பாலம்தான்
மும்பையின் தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என பல இடங்களில் இவர்கள் துப்பாக்கிசூட்டையும் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான் அஜ்மல் கசாப் தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டான். அதில் 58 பேர் கொல்லப்பட்டனர். எத்தனையோ பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்தனர்.

கருப்பு புள்ளி
இப்படி ஒரு பயங்கரத்தை கண்டு இந்தியா மட்டுமல்லாது உலகமே அரண்டு போனது அன்று. இன்னமும் கூட மும்பை தாக்குதல் என்பது வரலாற்றில் கருப்பு புள்ளியாக பளிச்சென இருக்கிறது. தாக்குதலை முடித்து விட்டு இதே பாலம் வழியாகத்தான் கசாப்பும், அவனது கூட்டாளியும் தப்பி வெளியேறினர். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். 58 பேரை இருவரும் சுட்டுக் கொன்றனர்.

காவு வாங்குகிறது
இறந்தவர்கள் எல்லாருமே அப்பாவிகள்... அந்த வழியாக நடந்து போய்கொண்டிருந்த பொதுமக்கள்! அதனால்தான் மும்பை மக்கள் இந்த பாலத்தை 'கசாப் பாலம்' என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். கசாப் அன்று உயிர்பலி வாங்கியது இல்லாமல், இப்போது அடுத்தடுத்த உயிர்களையும் இந்த பாலம் காவு வாங்க வருவதால் பொதுமக்கள் இன்னமும் பீதியில்தான் உள்ளனர். கசாப் மறைந்தாலும் அவனது பயங்கரம் இந்த பாலத்திலேயே தங்கிவிட்டது!
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications