திடீர் உடல்நலக்குறைவு.. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
89 வயதான பிரதீபா பாட்டில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி வகித்திருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து நேற்று புனேவில் உள்ள பார்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் வேகமாக பரவ தொடங்கியிருந்தது. முதன் முதலாக மகாராஷ்டிராவின் 'ஜல்கான்' சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மாநில அமைச்சரவையில் அமைச்சராக சுகாதாரம், சுற்றுலா, நாடாளுமன்ற விவகாரங்கள், வீட்டுவசதி, சமூக நலம், கலாச்சாரம், பொது சுகாதாரம், சமூக நலம், மதுவிலக்கு மறுவாழ்வு, கல்வி அமைச்சர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
அதேபோல சட்டப்பேரவை தலைவராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்யசபா துணை சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்புகளிலிலிருந்து, எம்பி ஆகி பின்னர் இறுதியாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இனிமையான அணுகு முறைக்கு பெரியதாக அறியப்பட்ட பிரதீபா பாட்டில், ஓய்வுக்கு பின்னர் புனேவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications