லாக்டவுனால் பூட்டப்பட்ட சலூன் கடைகள்.. ஏழை குழந்தைகளுக்கு ப்ரீ ஹேர் கட் செய்யும் மும்பைக்காரர்
மும்பை: கொரோனா பாதிப்பால் லாக்டவுன் கழித்து நீண்ட நாட்கள் கழித்து கடைகளை திறந்த போதிலும் மும்பையில் ஒரு முடிதிருத்த கலைஞர் லாபம் நோக்கில் செயல்படாமல் ஏழைகளுக்கு இலவசமாக செய்து வருவது வைரலாகி வருகிறது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் 2 மாதங்களுக்கு மேல் பூட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் 4ஆவது கட்டமாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டபோது துணிக் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் சலூன் கடைகள், பியூட்டி பார்லர் உள்ளிட்ட கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது 5-ஆவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சலூன் கடைகளும் சில விதிகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடை
பார்பருக்கும் வாடிக்கையாளருக்குமான தொடர்பு என்பது மிகவும் நெருக்கமாக இருக்கும் என்பதால் தொற்று பரவ அதிக பாதிப்புள்ளதால் கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏராளமான சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முழு வீச்சில் செயல்பட இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

தோராயம்
லாக்டவுன் நேரத்தில் கடைகள் திறக்கப்படாததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். சிலர் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஹேர் கட் செய்வது எப்படி என்று யூடியூப்பில் பார்த்து கற்றுக் கொண்டு தோராயமாக முடிகளை வெட்டி விட்டனர். சரி அது இருக்கட்டும்.

முடிதிருத்த கலைஞர்
சலூன் கடைகளைத் திறந்தவுடன் கஸ்டமரை பிடித்தோமா, முடிகளை வெட்டினோமா, ஷேவிங் செய்தோமா என வியாபார ரீதியில் அணுகாத ஒரு முடிதிருத்த கலைஞர் சேவை ரீதியில் செயல்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம் மும்பையில் உள்ள முடிதிருத்த கலைஞர்தான் இந்த சேவையை செய்து வருகிறார்.

இலவசம்
மும்பையின் டிட்வாலா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர பிராரி. இவர் மும்பையில் உள்ள தெருவோரங்களில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறார். வாரத்தில் ஒரு நாள் அவர் இதுபோல் இலவச முடிதிருத்தத்தை செய்து வருகிறார். இதுகுறித்து பிராரியிடம் கேட்ட போது லாக்டவுனால் இரு மாதங்களாக அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன. சாலையோரம் உள்ள ஏழை குழந்தைகளால் எப்படி முடிவெட்டிக் கொள்ள முடியும். அதனால் நான் இலவசமாக வெட்டி விட்டேன் என்றார் பிராரி.












Click it and Unblock the Notifications