லாக்டவுனால் பூட்டப்பட்ட சலூன் கடைகள்.. ஏழை குழந்தைகளுக்கு ப்ரீ ஹேர் கட் செய்யும் மும்பைக்காரர்
மும்பை: கொரோனா பாதிப்பால் லாக்டவுன் கழித்து நீண்ட நாட்கள் கழித்து கடைகளை திறந்த போதிலும் மும்பையில் ஒரு முடிதிருத்த கலைஞர் லாபம் நோக்கில் செயல்படாமல் ஏழைகளுக்கு இலவசமாக செய்து வருவது வைரலாகி வருகிறது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் 2 மாதங்களுக்கு மேல் பூட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் 4ஆவது கட்டமாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டபோது துணிக் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் சலூன் கடைகள், பியூட்டி பார்லர் உள்ளிட்ட கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது 5-ஆவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சலூன் கடைகளும் சில விதிகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடை
பார்பருக்கும் வாடிக்கையாளருக்குமான தொடர்பு என்பது மிகவும் நெருக்கமாக இருக்கும் என்பதால் தொற்று பரவ அதிக பாதிப்புள்ளதால் கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏராளமான சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முழு வீச்சில் செயல்பட இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

தோராயம்
லாக்டவுன் நேரத்தில் கடைகள் திறக்கப்படாததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். சிலர் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஹேர் கட் செய்வது எப்படி என்று யூடியூப்பில் பார்த்து கற்றுக் கொண்டு தோராயமாக முடிகளை வெட்டி விட்டனர். சரி அது இருக்கட்டும்.

முடிதிருத்த கலைஞர்
சலூன் கடைகளைத் திறந்தவுடன் கஸ்டமரை பிடித்தோமா, முடிகளை வெட்டினோமா, ஷேவிங் செய்தோமா என வியாபார ரீதியில் அணுகாத ஒரு முடிதிருத்த கலைஞர் சேவை ரீதியில் செயல்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம் மும்பையில் உள்ள முடிதிருத்த கலைஞர்தான் இந்த சேவையை செய்து வருகிறார்.

இலவசம்
மும்பையின் டிட்வாலா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர பிராரி. இவர் மும்பையில் உள்ள தெருவோரங்களில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறார். வாரத்தில் ஒரு நாள் அவர் இதுபோல் இலவச முடிதிருத்தத்தை செய்து வருகிறார். இதுகுறித்து பிராரியிடம் கேட்ட போது லாக்டவுனால் இரு மாதங்களாக அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன. சாலையோரம் உள்ள ஏழை குழந்தைகளால் எப்படி முடிவெட்டிக் கொள்ள முடியும். அதனால் நான் இலவசமாக வெட்டி விட்டேன் என்றார் பிராரி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications