மோசமான தலைவரை கொண்டிருப்பது மகாராஷ்டிராவின் தவறு அல்ல.. உத்தவ் மீது பட்னாவிஸ் மனைவி கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: அண்மைக்காலமாக சிவசேனாவுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ், ஒரு மோசமான தலைவரைக் கொண்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் தவறு அல்ல, "ஆனால் ஒருவரை மட்டும் நம்புவது தவறு" என்று தெரிவித்துள்ளார்.

இந்துத்துவா சித்தாந்தவாதியான வி டி சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக பேசியதை கண்டித்து அம்ருதாவின் கணவர் பட்னாவிஸ் ட்வீட் செய்து பதிலடி கொடுத்தார். அப்போது மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் பட்னாவிஸ் விமர்சித்தார்.

Having a bad leader was not Maharashtras fault: Amruta Fadnavis

அவர் விமர்சனம் செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு பட்னாவிஸ்சின் மனைவி அம்ருதா தன்னுடைய டுவிட்டரில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதில் "ஒரு மோசமான தலைவரைக் கொண்டிருப்பது மகாராஷ்டிராவின் தவறு அல்ல-ஆனால் ஒருவருரை மட்டும் நம்பது தவறு " என கூறினார். அவர் தனது ட்வீட்டை "ஜாகோ மகாராஷ்டிரா" (மகாராஷ்டிராவை எழுப்புங்கள்) என்ற வார்த்தைகளுடன் முடித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு, மும்பையின் ஒரு பகுதியான தானே மாநகராட்சியில் பணியாற்றுவோரின் சம்பள கணக்கை அம்ருதா பட்னாவிஸ் உயர் அதிகாரியாக பணியாற்றும் ஆக்சிஸ் வங்கியில் இருந்து, தேசியமயமாக்கப்பபட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இதே போல் மகாராஷ்டிரா போலீசாருக்கான சம்பள கணக்கையும் ஆக்சிஸ் வங்கி இழக்கப்போகிறது. சிவசேனா கூடடணி அரசு 11 ஆயிரம் கோடி ரூபாய்மதிப்புள்ள சம்பள கணக்குகளை அரசின் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+