உடலுறவு.. அதுவும் ஸ்கூல் செக்யூரிட்டி ரூமிலேயே.. யார்னு பாருங்க.. பறந்து வந்த போலீஸ்.. அதிர்ந்த ஜனம்
மும்பை: நைட் நேரத்தில், யாருமில்லாத பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, குடியிருப்புவாசிகள் அதிர்ந்து போயுள்ளனர்.. என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?
பாலியல் வன்கொடுமை என்றாலே, பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான் நினைவுக்கு வரும்.. ஆனால் சில காமப்பிண்டங்கள், வயதான பெண்களிடமும், குழந்தைகளிடமும்கூடஇப்படி தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகள் வெளியாகி வருகின்றன.. அவ்வளவு ஏன்? இறந்துபோன சடலத்தையும் இதுபோன்ற காமுகர்கள் விட்டு வைப்பதில்லை.

ஆண் நண்பர்: அதேசமயம், ஒரு ஆண் நபரை சில பெண்கள் கடத்தி கொண்டுபோய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வும் நம்முடைய நாட்டில் நடந்துள்ளது.. ஒருகட்டத்தில் மனிதர்களையும்தாண்டி, சில பேர் மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவமும் பெருகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு டெலிவரி பாய் ஒருவர், சாலையோரம் இருந்த நாய் குட்டியை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்தார். இன்னொரு நபர், தன்னுடைய வீட்டுக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த நாயை வன்கொடுமை செய்தார்.. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து, இவர்கள் கைதானார்கள்.
வீடியோ: அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமாகிவிட்டது.. 19 வயது டிக்டாக் பெண், தான் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை பலாத்காரம் செய்து, அதனை வீடியோவும் எடுத்திருந்தார். கடைசியில் இவரையும் போலீசார் கைது செய்தார்கள். கடந்த வாரம்கூட, ஆடம் பிரிட்டன் என்ற 51 வயது பிரபலம் கைதானார்.. இவர் பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்களின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார்..
வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.. முதலைகளை கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராம். அதனால், 'முதலை' மனிதர் என்றாலே அமெரிக்காவில் இவர் ரொம்ப ஃபேமஸாம்.
ஆனால், 50-க்கும் மேற்பட்ட நாய்களை பலாத்காரம் செய்து, அந்த வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த விலங்குகளை துன்புறுத்தி, அதில் இன்பம் அடைபாராம். அதுவும் சாகும்வரை அந்த விலங்குகளை பலாத்காரம் செய்வாராம்..
செக்யூரிட்டி: இதோ நம்முடைய மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.. இந்த ஸ்கூலுக்கு அருகிலேயே, நிறைய குடியிருப்புகளும் உள்ளன.. இந்த குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார் அந்த 30 வயது நபர்..
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இரவு வழக்கம்போல் டியூட்டிக்கு வந்துள்ளார்.. அந்த செக்யூரிட்டி ரூமிலேயே, நாய் ஒன்றுடன் இவர், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளார்.. இரவு நேரம் என்பதால், ஸ்கூலில் யாருமே இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில், இந்த காரியத்தில் இறங்கியிருக்கிறார்..
ஆனால், பள்ளி பகுதியில் இருந்தவர்கள், இதை பார்த்துவிட்டனர்.. நாயுடன் செக்யூரிட்டி உடலுறவில் ஈடுபட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்... உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்தார்கள்.. உடனடியாக போலீசாரும் விரைந்து வந்து, செக்யூரிட்டியை விசாரித்திருக்கிறார்கள்..
வாக்குமூலம்: இயற்கை மாறாக நாயுடன் உடலுறவு கொண்டதை, செக்யூரிட்டியும் ஒப்புக் கொண்டுள்ளார்.. இதற்கு பிறகு, அவர்மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு முரணான குற்றங்களில் ஈடுபடுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, அந்த பகுதி குடியிருப்புவாசிகள் அதிர்ந்துவிட்டனர். காவலுக்காக பணியில் அமர்த்திய நபரே இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறாரே என்று அதிர்ந்து போயுள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள், நாளுக்கு நாள் வடமாநிலங்களில் நடந்துவரும்நிலையில், வாயில்லாத ஜீவன்களையும் கூட, இதுபோன்ற "மிருகங்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications