வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்க்கும் மழை.. வெள்ளக்காடான மும்பை.. ஒரே நாள் இரவில் 34 பேர் பலி
மும்பை: மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால் ஒரே நாள் இரவில் 34 பேர் பலியான சோகச் சம்பவம் நடந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்புகள், ரயில் தண்டவாளங்கள் ஆகிய இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலை எது, பள்ளம் எது என தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

1974-ஆம் ஆண்டு
1974-ஆம் ஆண்டு மும்பையில் இது போன்ற பேய் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே போன்ற மழையின் அளவு பதிவாகியுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதி
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையில் 375.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மும்பையின் தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தடுப்புச் சுவர்
மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மலையையொட்டி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் எல்லையை வரையறுக்கும் வகையில் பெரிய தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது.

காரில் பலி
இந்த நிலையில் அந்த சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 21 பேர் பலியாகிவிட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அது போல் மும்பை மலாடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த இருவர் வெளியே வரமுடியாமல் காரிலேயே பலியாகினர்.

34 பேர் பலி
தானேவில் உள்ள கல்யாணில் மழை பெய்து கொண்டிருந்த போது அங்குள்ள தேசிய உருது பள்ளி சுற்றுச் சுவர் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு இடிந்தது. இதில் 3 பேர் பலியாகிவிட்டனர். அதுபோல் புனே அம்பேகாவ் பகுதியில் உள்ள சின்ஹாட் என்ற கல்லூரியின் சுற்றுச்சுவர் மழையின் போது இடிந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி குடிசை அமைத்து தங்கியிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபோல் ஒரே நாள் இரவில் 34 பேர் பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications