பயிற்சி கொடுத்தனர்.. தலையிலும், கண்ணுக்கு மேலும் சுட்டு தபோல்கரை கொன்றேன்! கொலையாளி பரபர வாக்குமூலம்
Recommended Video
மும்பை: இடதுசாரி சிந்தனையாளரும், பகுத்தறிவாளருமான, நரேந்திர தபோல்கரை கொலை குற்றவாளி, போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தபோல்கரை எப்படி இரண்டு முறை சுட்டுக் கொன்றேன் என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு முதல் அடுத்தடுத்த ஆண்டுகளில், பகுத்தறிவாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என இடதுசாரி சிந்தனையாளர்கள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் தபோல்கர் வாக்கிங் சென்றபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில், எம்.எம்.கல்பூர்கி ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே 2017ம் ஆண்டு செப்டம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைகள் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தின.

துப்பாக்கி தயாரிப்பு
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம், நல்லசோபராவில் கைத்துப்பாக்கி உற்பத்தி பிரிவில் அம்மாநில போலீசார் நடந்திய ரெய்டின்போது, சரத் கலாஸ்கர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது, பகுத்தறிவாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைகளுக்கு இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் பின்னர் கர்நாடக போலீசாருடன் பகிரப்பட்டது.

பரபரப்பு வாக்குமூலம்
இந்த நிலையில் சரத் கலாஸ்கர் அளித்த 14 பக்க வாக்குமூலம் சில ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளது. தனது வாக்குமூலத்தில் கொலை நிகழ்வை அவர் நினைவுகூர்ந்துள்ளார். தன்னை சில வலதுசாரியினர் தொடர்பு கொண்டதாகவும், சித்தாந்தம், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் செயல்முறை ஆகியவை குறித்து தனக்கு அவர்கள்தான் சொல்லி கொடுத்ததாகவும், திடுக்கிடும் தகவலை சரத் கலாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இரு குண்டுகள்
இதன்பிறகு, சில தீய சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வீரேந்திர தவ்டே என்னிடம் தெரிிவித்தார். அதையேற்று நானும் தபோல்கரை சுட்டுக் கொன்றேன். நரேந்திர தபோல்கரை தலையில் சுடுமாறு தவ்டே என்னிடம் கூறியிருந்தார். அதன்படி நான் சுட்டேன். பின்னால் இருந்து தலையில் சுட்டேன். அவர் கீழே விழுந்ததும், கண்ணுக்கு மேல் பகுதியை குறி வைத்து சுட்டேன். 2 குண்டுகளை தலையில் பாய்த்து கொன்றேன். என்னுடன் வந்த சச்சின் அந்துரே என்ற கூட்டாளியும், தபோல்கரை சுட்டார். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கூட்டங்கள்
விரேந்திர தவ்டேதான், அமோல் கலே, என்பவரை சரத் கலாஸ்கருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அமோல் கலே என்பவர்தான், கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கவுரி லங்கேஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய பல கூட்டங்களுக்கு, தானும் சென்றதாக சரத் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் மூளையாக இருந்த வீரேந்திர தவ்டே, சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications