அஜித் பவார் ஏன் இப்படி செய்தார்.. தேவேந்திர பட்னாவிஸ் சொன்ன பதில் இதுதான்!
Recommended Video
மும்பை: சரியான நேரத்தில், சரியான தகவலை சொல்வேன் என கூறியுள்ளார், மகாராஷ்டிரா காபந்து முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்துவிட்டு, பின்னர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ். அஜித் பவார் எதற்காக திடீரென கூட்டணியை விட்டு வெளியேறினார் என்பது குறித்து, மர்மம் நிலவுகிறது.

இதுபற்றி, நிருபர்கள் இன்று தேவேந்திர பட்னாவிசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நான் சரியான நேரத்தில், சரியான தகவலை சொல்வேன். கவலை வேண்டாம் என்று பதிலளித்தார்.
பட்னாவிஸ் ராஜினாமா செய்த சில நிமிடங்களில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கப்போவதாக அறிவித்தன. அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் வந்து இணைந்து கொண்டுள்ளார்.
உத்தவ் தாக்ரே நாளை முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், பாஜக தலைவர், ஏக்நாத் கட்சே அளித்த பேட்டியொன்றில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவை, பாஜக பெற்றிருக்க கூடாது. இது எனது தனிப்பட்ட கருத்து. மிகப்பெரிய நீர்ப்பாசன மோசடியில், அஜித் பவாருக்கு தொடர்பு உள்ளது. எனவேதான் அவரது ஆதரவை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்ற அதிருப்தி கருத்துக்களுக்கு நடுவே, சரியான நேரத்தில் சரியான தகவலை சொல்வேன் என பட்னாவிஸ் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அஜித் பவார் குறித்து, பட்னாவிஸ் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications