ரிசார்ட் ரெடி பண்ணுங்க? தொங்கு சட்டசபையை நோக்கி செல்லும் மகாராஷ்டிரா? எக்சிட் போல் சொல்வது என்ன?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெல்லும் என்று சில கணிப்புகள் கூறினாலும் பெரும்பாலான கணிப்புகள் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்புகளை வெளியிட்டு உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும். இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளின்படி

பி-மார்க் - பாஜக கூட்டணி 137-157 - காங்கிரஸ் கூட்டணி - 126-146 - மற்றவை - 2-8
மேட்ரிஸ் - பாஜக கூட்டணி 150-170 - காங்கிரஸ் கூட்டணி - 110-130 - மற்றவை - 8-10
சாணக்கியா - பாஜக கூட்டணி 152-160 - காங்கிரஸ் கூட்டணி - 130-138 - மற்றவை - 6-8
டைனிக் பாஸ்கர் - பாஜக கூட்டணி 125-140 - காங்கிரஸ் கூட்டணி - 135-150 - மற்றவை - 20-25
லோக்ஷாஹி மராத்தி ருத்ரா - பாஜக கூட்டணி 128-142 - காங்கிரஸ் கூட்டணி - 125-140 - மற்றவை - 18-23
வாக்கெடுப்பு டெய்ரி - பாஜக கூட்டணி 122-186 - காங்கிரஸ் கூட்டணி - 69-121 - மற்றவை - 12-29
பீப்பிள்ஸ் பல்ஸ் - பாஜக கூட்டணி 175-195 - காங்கிரஸ் கூட்டணி - 85-112 - மற்றவை - 7-12
சராசரி கருத்துக்கணிப்பு - பாஜக கூட்டணி 141-164 - காங்கிரஸ் கூட்டணி - 111-134 - மற்றவை - 10-16
இதில் பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ் ஆகியவை பாஜக கூட்டணி கண்டிப்பாக வெல்லும் என்று கணித்து உள்ளன. ஆனால் மற்ற கணிப்புகள் கிட்டத்தட்ட இரண்டு கூட்டணிகளும்.. அதாவது பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டும் கிட்டத்தட்ட மெஜாரிட்டி மார்க்கான 145க்கு அருகே வரும்.. அதாவது தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று கணிப்புகளை வெளியிட்டு உள்ளன.
அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிதான் ஆட்சி என்று பல்வேறு கணிப்புகள் கூறிய நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று டேனிக் பாஸ்கர் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 125-140 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக மாறும் என்று டேனிக் பாஸ்கர் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 135-150 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மற்றவை 20-25 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மகாராஷ்டிராவில் எங்கே தொங்கு சட்டசபை உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே மீண்டும் ரிசார்ட் அரசியல் தலை தூக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications